திண்டிவனம்: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் 61ஆவது திருமண நாளில் கலந்து கொண்டு பெற்றோரிடம் ஆசி பெற்ற அன்புமணி ராமதாஸ், இனி எல்லாம் நல்லதே நடக்கும் என தெரிவித்துள்ளார். ராமதாஸின் 61ஆவது திருமண நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்க மனைவி சவுமியா, 3 மகள்கள், மருமகன்கள், பேரக் குழந்தைகளுடன் தைலாபுரம் தோட்டத்திற்கு அன்புமணி காலை வந்திருந்தார்.