தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி வட்டங்களில் வறட்சியால் கால்நடை தீவனம் தட்டுப்பாடு

ஓசூர்: தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி வட்டங்களில் நிலவும் வறட்சியால், கால்நடைகளுக்குத் தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டின மாடுகளை விவசாயிகள் விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி ஆகிய வட்டங்களில் உள்ள மலைக் கிராமங்களில் விவசாயம் பிரதானத் தொழிலாக இருந்து வருகிறது. மேலும், சார்பு தொழிலாகக் கால்நடைகள் வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இவ்விரு வட்டங்களிலும், கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையில்லாததால், வேளாண் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், பெரும்பாலான விவசாயிகள் மாற்றுத் தொழிலுக்கு மாறி வருகின்றனர். இருப்பினும், பல விவசாயிகள் சார்பு தொழிலான ஆடு, மாடு, எருமை, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.