துவரம் பருப்பு கிலோ ரூ.180 - வரத்து குறைவால் உயரும் மளிகை பொருட்களின் விலை

சென்னை: தமிழகத்தில் வரத்து குறைவால் மளிகை பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. கிலோ ரூ.140 வரை விற்கப்பட்டு வந்த துவரம் பருப்பு தற்போது ரூ.180 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 8 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான மளிகை மற்றும் காய்கறி தேவைகளை வெளி மாநிலங்களே பூர்த்தி செய்து வருகின்றன. தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், வெளி மாநிலங்களில் இருந்து மளிகை பொருட்களின் வரத்து குறைந்து வருகிறது. இதன் காரணமாக அவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இது தொடர்பாக கோயம்பேடு உணவு தானிய வளாக வியாபாரிகள் கூறியதாவது: தற்போது துவரம் பருப்பு, பூண்டு, அரிசி ஆகிய பொருட்களின் விலைதான் உயர்ந்து வருகிறது. இரு மாதங்களுக்கு முன்பு ரூ.140 வரை விற்கப்பட்டு வந்த துவரம் பருப்பு தற்போது ரூ.180 வரை விற்கப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.