கோடை வெயிலின் தாக்கத்தால் பம்ப்செட் விற்பனை 25% அதிகரிப்பு

கோவை: தரமான பம்ப்செட் தயாரிப்பில் உலகளவில் கோவை மாவட்ட பம்ப்செட் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் வீடு மற்றும் விவசாய பயன்பாட்டுக்கான பம்ப்செட் தேவை அதிகரித்துள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இந்திய பம்ப்செட் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் கார்த்திக், தமிழ்நாடு பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் சவுந்தர் ராஜன், இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளையின் முன்னாள் தலைவர் மற்றும் பம்ப்செட் விற்பனையாளர் நந்தகுமார் ஆகியோர் கூறியதாவது: தேசிய அளவிலான பம்ப்செட் தேவையில் கோவை மாவட்ட தொழில் நிறுவனங்கள் 50 சதவீதத்துக்கும் மேல் பங்களிப்பு கொண்டுள்ளன. ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை பம்ப்செட் சீசனாகும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.