ஸ்போர்ட்ஸை ஊக்குவிப்பதற்கு முயற்சிகள் எடுத்து வருகிறார்கள்! - முதல்வர் விஜய் குறித்து அஜித்

இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரேசிங் சர்க்யூட்டில் லீ மேன்ஸ் கப் நடத்தும் கார்பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்கிறார்.

முதல்வர் விஜய்

அதில் தமிழ்நாடு முதல்வர் விஜய் கலந்துகொண்டு, பச்சைக் கொடி காட்டித் தொடங்கி வைப்பார் என்ற செய்தி வெளியிடப்பட்டது.

போட்டி தொடங்குவதற்கு முன்பு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் அஜித்குமார், "முதல்வர் விஜய் தனது பரபரப்பான பணிச் சூழலுக்கு இடையே நேரம் ஒதுக்கி லண்டன் வந்துள்ளார். அவரை மக்கள் முதல்வராக தேர்ந்தெடுத்திருப்பத்து மகிழ்ச்சி.

கடந்த 34 ஆண்டுகளாகத் திரையுலகில் நாங்கள் சக நடிகர்களாக இருந்தோம்.

Ajith Kumar
Ajith Kumar

தற்போது முதல்வர் விஜய் தலைமையிலான அரசு விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பதற்கு பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

இப்போது இங்கு அழைப்பை ஏற்று வந்து விளையாட்டை துவக்கி வைப்பதும் மகிழ்ச்சி.

இதுபோன்ற சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள் இந்தியாவிற்கும், இந்தியாவில் உள்ள நம் அனைவரிடமும் வர வேண்டும் என்பதே எனது மிகப்பெரிய ஆசையாகும்" எனப் பகிர்ந்திருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.