கொழும்பு டெஸ்ட் போட்டியில் முக்கிய சாதனை செய்த சுப்மன் கில்.. குவியும் வாழ்த்துக்கள்..

 

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். 

 

கொழும்புவில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல் 18 ரன்களிலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 45 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து ஷுப்மன் கில் மற்றும் தேவ்தத் படிக்கல் இணைந்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

 

நிதானமாக விளையாடிய கில் அரைசதத்தை கடந்ததுடன், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 3,000 ரன்களையும் நிறைவு செய்தார். 43 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 77 இன்னிங்ஸ்களில் 3,004 ரன்களை குவித்துள்ளார். இதில் 11 சதங்கள் மற்றும் 8 அரைசதங்கள் அடங்கும்.

 

26 வயது 349 நாட்களில் இந்த மைல்கல்லை எட்டிய கில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,000 ரன்களை கடந்த இந்திய வீரர்களில் நான்காவது இளம் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

 

கேப்டன் பொறுப்புடன் பேட்டிங்கிலும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் கில்லின் இந்த சாதனை, அவரது டெஸ்ட் பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியும் கொழும்பு டெஸ்ட்டில் வலுவான நிலையில் விளையாடி வருகிறது.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.