Lingam: நான் என் நிஜ வாழ்க்கையில் சந்தித்த வன்முறைகளின் பின்னணியே... - லக்ஷ்மி சரவணக்குமார்

எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் லிங்கம் வெப் சீரிஸ் இந்த வாரம் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.

சென்னையில் இந்த வெப் சீரிஸின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த சீரிஸ் பற்றி படக்குழுவினர் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

லிங்கம் | வெப் சீரிஸ்

ஜூனியர் விகடனில் வெளியாகி வாசகர்களை ஈர்த்த லிங்கம் தொடரைத் தழுவி இந்த சீரிஸ் உருவாகியிருக்கிறது. கதிர், திவ்யபாரதி, பூர்ணிமா ரவி, போஸ் வெங்கட் ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.

இந்த நிகழ்வில் இயக்குநர் லக்ஷ்மி சரவணக்குமார் பேசுகையில், "இந்த ஐந்தரை வருட நீண்ட பயணம் எனக்கு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த சோர்வையும் எதிர்பார்ப்பையும் கொடுத்தது.

சாகித்திய அகாதமி விருது பெற்ற ஒரு எழுத்தாளரான எனக்கு இயக்குநர் வசந்தபாலனிடம் பணியாற்றிய அனுபவமே, இயக்குநராக வேண்டும் என்கிற உந்துதல் அளித்தது. நான் எழுதிய 85 கதைகளில் பல முக்கியக் கதைகள் விகடனில்தான் வந்தன.

இரண்டாம் ஆட்டம் தொடரின் 40 அல்லது 50-வது எபிசோடின் போது இந்த சீரிஸிற்கான கதவு திறந்தது. விகடன் நிறுவனத்தின் ஸ்ரீனிவாசன் சார், ராதிகா மேடம், ராதா மேடம், செல்வா சார் ஆகியோருக்குத் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.

Lakshmi Saravanakumar - Lingam
Lakshmi Saravanakumar - Lingam

தொடர்ந்து பேசியவர், "நான் மனைவியின் நகையை அடகு வைத்துவிட்டு, கான்சர்ட் பார்க்கப் போகும் அளவிற்குப் பயங்கர மியூசிக் அடிக்ட்"என்றவர், "லிங்கம் கதாபாத்திரத்திற்கு சாய்ஸ் இல்லாத ஒரே ஆள் கதிர்தான். இதில் அவர் ஒரு ஆக்ஷன் ஹீரோவாகப் பரிணமித்துள்ளார். நான் என் நிஜ வாழ்க்கையில் சந்தித்த வன்முறைகளின் பின்னணியே இந்த சீரிஸ் உருவாகக் காரணம்." என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.