Lingam: பேச்சுலர் படத்திற்குப் பிறகு லிங்கம் தொடரில் மாறுபட்ட கதாபாத்திரம்! - திவ்யபாரதி
எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் லிங்கம் வெப் சீரிஸ் இந்த வாரம் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.
சென்னையில் இந்த வெப் சீரிஸின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த சீரிஸ் பற்றி படக்குழுவினர் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
கதிர், திவ்யபாரதி, பூர்ணிமா ரவி, போஸ் வெங்கட் ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.
இந்த நிகழ்வில் பூர்ணிமா ரவி பேசுகையில், "பிக்பாஸிற்கு பின் எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பில், தைரியமான கேரக்டரில் நடித்துள்ளேன். ஷோரன்னர் பிரசாந்த் சார், இயக்குநர் லட்சுமி சார் என்னை ஃபேமிலி மாதிரி பார்த்துக்கொண்டனர்.
அண்டர்ரேட்டட் ஆக்டர் எனப் பேசப்படும் கதிரின் நடிப்பு இதில் மிரட்டலாக உள்ளது, லிங்கம் அவரது கரியரில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். திவ்யா பாரதியும் நானும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டோம்." என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய திவ்யா பாரதி, "பேச்சுலர் படத்தின் மாடர்ன் ஐடி பெண் கதாபாத்திரத்திற்குப் பிறகு, லிங்கம் தொடரில் அதற்கு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.
ரோகிணி என்ற கன்னியாகுமரி பெண்ணாக இதில் வருகிறேன். 90-களில் ஒருவரின் குறைகளையும் ஏற்று வாழும் ஒரு போல்டான பெண்ணின் எமோஷனல் கதை இது. இத்தகைய அழுத்தமான கதாபாத்திரம் எனக்குப் பொருந்தும் என நம்பி, என்னைத் தேர்ந்தெடுத்ததற்குப் பெரிய நன்றி" எனத் தெரிவித்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
