வைபவ் மனது வைத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு ராஜஸ்தான் செல்ல வாய்ப்பு.. இன்று மும்பையுடன் மோதல்..!

ஐபிஎல் 2026 தொடரின் பிளே-ஆஃப் சுற்றுக்கான தகுதி போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளும் முக்கியமான கட்டத்தில் உள்ளது. இந்த இறுதி லீக் போட்டியில் வெற்றி பெற்றால், ராஜஸ்தான் அணி 16 புள்ளிகளுடன் பிளே-ஆஃப் சுற்றை உறுதி செய்யும். தற்போது ராஜஸ்தான் அணி 14 புள்ளிகளுடன் உள்ள நிலையில், இந்த வெற்றி அவர்களுக்கு புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் ஒரு இடத்தை பெற்று தரும்.

 

மறுபுறம், ராஜஸ்தான் அணி இந்த போட்டியில் தோல்வியடைந்தால், தொடரிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். இத்தகைய சூழலில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சாதகமான வாய்ப்பு ஏற்படும். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது போட்டியில் வெற்றி பெற்றால், பிளே-ஆஃப் வாய்ப்பு நிகர ஓட்ட விகிதத்தை பொறுத்தே அமையும்.

 

ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டமும், யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் சிறப்பான ஃபார்மும் பெரும் பலமாக உள்ளது. குறிப்பாக, மும்பை மைதானத்தில் ஜெய்ஸ்வாலுக்கு உள்ள சிறந்த அனுபவம் அணிக்கு நம்பிக்கையளிக்கிறது. 

 

அதே சமயம், ரியான் பராக் மற்றும் துருவ் ஜூரல் தங்களது மிடில் ஆர்டர் பேட்டிங்கில் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணி இப்போட்டியில் ஆறுதல் வெற்றிக்காக களமிறங்கினாலும், பிளே-ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க ராஜஸ்தான் அணி முழு பலத்துடன் போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.