15 வருஷத்தில் அஸ்வின், ஜடேஜா இல்லாத டெஸ்ட் போட்டி!. ஆப்கானிஸ்தானுடன் மோதும் இந்தியா!..
இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் டெஸ்ட் போட்டி இன்று காலை பஞ்சாப் மாநிலம் நியூ சண்டிகரில் தொடங்கியுள்ளது. போடிக்கான டாஸ் போடப்பட்டு அதில் டாஸில் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறது. எனவே, ஆப்கானிஸ்தான் அணி பந்து வீசி வருகிறது.
இந்திய அணி கடந்த கடந்த வருடம் தென்னாப்பிரிக்காவோடு விளையாடிய டெஸ்ட் போட்டியில் 0 - 2 கணக்கில் தோற்று கடும் விமர்சனத்தை சந்தித்த நிலையில் இந்த போட்டி முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதோடு, சொந்த மண்ணில் களமிறங்குவது இந்திய வீரர்களுக்கு பலமாக பார்க்கப்படுகிறது.
இன்று காலை 9:30 மணிக்கு இந்த டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்நிலையில் 2010 நவம்பர் மாதத்திற்கு பிறகு கடந்த 15 ஆண்டுகளில் இந்திய மண்ணில் நடந்த 69 டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் அல்லது ஜடேஜா இருவரில் யாரேனும் ஒருவர் கண்டிப்பாக விளையாடுவார்கள். ஆனால் 15 ஆண்டுகளில் முதல்முறையாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியில் இருவரும் இல்லாமல் இந்திய இந்திய அணி விளையாடி வருகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.