ரெண்டு ஜெய்சங்கர் படத்தையாவது பார்த்து கதை எழுத வேண்டியதுதானே…! மிஸ்டர் எக்ஸை வறுத்த புளூசட்டை மாறன்

மனு ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் மிஸ்டர் எக்ஸ். இந்தப் படத்தைப் பற்றிய விமர்சனத்தை பிரபல யூடியூபர் புளூசட்டை மாறன் இப்படி சொல்கிறார்.

இது ஒரு ஸ்பை திரில்லர் படம். படத்தோட ஆரம்பத்துல ஹீரோ ரா ஏஜென்ட்டா வாராரு. ஜி20 மாநாடு சென்னையில் நடக்குது. இந்தியாவுல நியூக்ளியர் டிவைஸ ஒரு ஏஜென்ட் பாதுகாத்து வர்றாரு. அவரையும், அந்த டிவைஸையும் கடத்திக் கொண்டு போய் வெளிநாட்டுல வச்சிடுறாங்க.

இந்த ஏஜென்டையும், டிவைஸையும் பாதுகாப்பா கொண்டு வரணும்னு ஒரு வேலையை ஹீரோக்கிட்ட கொடுக்குறாங்க. அப்புறம் என்னாச்சுங்கறதுதான் கதை. முதல் பாதியில் நிறைய கேரக்டர்கள். ஓரளவு ஓகே. 2வது பாதியில சஸ்பென்ஸ் மேல சஸ்பென்ஸ் வச்சி, டுவிஸ்ட் மேல டுவிஸ்ட் வச்சி கதையைவே குழப்பிட்டாங்க. அதிலும் மெய்னா தங்கச்சி கேரக்டரைக் கொண்டு வந்து காட்டுனதுக்கு பிறகு பல்லை இளிச்சிடுது சஸ்பென்ஸ்.

படம் ஆரம்பிச்சதுல இருந்து கடைசி வரைக்கும் டுவிஸ்ட் வைக்கிறேன் பாருன்னு கடைசில ஒரு டுவிஸ்ட் வைக்கிறாங்க. அது தேவையே இல்லாத டுவிஸ்ட். இந்த மாதிரி படங்களை எல்லாம் பார்த்துட்டு நாம வெளியே வரும்போது நம்முடைய ராணுவ வீரர்கள் தியாகம் பண்ணி இருக்கணும். இந்த மாதிரி ஏஜென்ட்டுகள், உளவாளிகள் எல்லாம் எவ்ளோ உயிரைக் கொடுத்து நம்மைக் காப்பாத்திருப்பாங்க அப்படிங்கற சந்தோஷத்தோட, திருப்தியோட வரணும். ஆனா இவங்க என்ன பண்ணிருப்பாங்கன்னா நம்ம ஏஜென்ட் எல்லாரையுமே டபுள் ஏஜென்ட் மாதிரி காட்டுறாங்க. அவங்களைப் பார்த்து பயப்படுற மாதிரி படம் எடுத்து வச்சிருக்காங்க.

இவங்க ஹாலிவுட் மாதிரி ஸ்பை திரில்லர் படம் எடுக்கப் போறேன்னு கிளம்புனது எல்லாம் தப்பு கிடையாது. அது ரொம்ப ஈசியான வழி. நிறைய படம் ரெஃப்ரன்ஸ் இருக்கு. அதைப் பார்த்து ஒழுங்கா ஒரு கதையை எழுதி இருக்கலாம். குறைஞ்சது ரெண்டு ஜெய்சங்கர் படத்தையாவது பார்த்து கதை எழுதி இருக்கலாம். இவங்க போட்டு குழப்பி சாகடிச்சிட்டாங்க. இந்தப் படத்துக்கு எல்லாம் ஹீரோக்கு எதுக்கு பெரிய ஃபேமிலி பேக்ரவுண்டு ஸ்டோரி?

வில்லனுக்கு எதுக்கு பிளாஷ்பேக்.? இது மாதிரி தேவையில்லாத விஷயத்தை எல்லாம் படத்துல வச்சி கடுப்பேத்தி விட்டாங்க. ஹீரோயிசம் பண்றேங்கற பேருல ஒரு சாகசம் பண்றாரு. சி4 பாம் நிலத்துல வெடிச்சா பெரிய சேதம் வரும்னு அதைக் கையிலே எடுத்துப் போய் நடுக்கடல்ல வெடிக்க வைக்காரு. அது பயங்கரமா வெடிக்கும். வெடிச்சி அடுத்த செகண்டே ஹீரோ உசுரோட வர்றாரு.

எப்படிடா தப்பிச்சி வந்தாருன்னு பார்த்தா அவரு அண்டர்வேர்ல்டு ஸ்பெஷலிஸ்ட். தண்ணிக்குள்ள தம் கட்டி நீச்சல் அடிச்சி வருவாரு. திரைக்கதையில கோட்டை விட்டுட்டாங்க. படத்துல நிறைய கிரின்ச் சீனையா வச்சி படத்தையே காலி பண்ணிட்டாங்க. படம் முழுக்க வயிறு முட்ட பொங்கலைத் தின்னுட்டு உட்கார்ந்து பார்த்த மாதிரியே இருந்துச்சு என்கிறார் புளூசட்டை மாறன்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.