மலையாள சினிமாவில் கால்பதிக்கும் யுவன் சங்கர் ராஜா

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் சங்கர் ராஜா, முதன்முறையாக மலையாளத் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார்.

அரவிந்தன் படம் மூல இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் யுவன் சங்கர் ராஜா. முதல் படத்திலேயே பாடல்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தொடர்ந்து துள்ளுவதோ இளமை, 7ஜி ரெயின்போ காலனி, காடல் கொண்டேன் என பல படங்களூக்கு இசையமைத்துள்ளார். இவரது பாடல்களை இளைய தலைமுறையினர் கொண்டாடி வருகிறார்கள்.

இந்த நிலையில் முதன் முறையாக மலையாள படம் ஒன்றிற்கு இசையமைக்கிறார் யுவன். மலையாள சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகராகவும், ஹீரோவாகவும் வலம் வரும் ஜோஜு ஜார்ஜ் பணி படத்தின் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். அதிரடி ஆக்‌ஷன் மற்றும் த்ரில்லர் பாணியில் உருவான அந்தப் திரைப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்லார்.

ஜோஜு ஜார்ஜ் எழுதி இயக்கும் இந்த இரண்டாவது படத்திற்கு பரிபாடி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில்தான் யுவன் சங்கர் ராஜா, மலையாளத் திரையுலகில் முதல் முறையாக தடம் பதிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு படங்களுக்கு இசையமைத்துள்ள யுவன் இந்த படம் மூலம் மல்லுவுட்டில் தடம் பதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.