அபிராமி வெங்கடாச்சலத்தின் லவ்வர் இவர் தானாம்.. இனிமே சப்ஸ்கிரிப்ஷன் பக்கம் வரமாட்டார் போல!

நடிகை அபிராமி வெங்கடாச்சலம், பிக்பாஸ் தமிழ் சீசன் 3 மூலம் மக்களிடையே பிரபலமானவர். தற்போது, தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சமீபத்தில், சப்ஸ்க்ரிப்ஷன் சர்ச்சையில் சிக்கிய அபிராமி, தற்போது தனது காதலரை அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஆரம்ப காலத்தில் மாடலிங்கில் தனது வாழ்க்கையை தொடங்கிய அபிராமி, மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்றார். அதன் பிறகு Star Wars என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பின்னர், விஜய் தேவரகொண்டாவின் NOTA படத்தின் மூலம் திரைப்படத்தில் அறிமுகமான அவர், களவு மற்றும் அஜித் குமாரின் நேர்கொண்ட பார்வை போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற அபிராமி, தனது தைரியமான மற்றும் வெளிப்படையான பேச்சுத் திறனால் மக்களிடையே அதிக கவனம் பெற்றார். இருப்பினும், அதே நிகழ்ச்சியில் முகேன் ராவ் உடன் ஏற்பட்ட காதல் தொடர்பு பெரிதும் பேசப்பட்டது. இதனால் அவர் சர்ச்சைகளிலும் சிக்கி, நிகழ்ச்சியில் இருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவானது.

அதனைத் தொடர்ந்து, இரு துருவம் என்ற தொடரில் நடித்த அவர், ஆரி அர்ஜுனன் உடன் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் ஒரு ஸ்கெட்ச் ஓவியத்தை பகிர்ந்துள்ளார். அதில், காதலர்கள் ஒருவரை ஒருவர் நேசத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

மேலும், அந்த பதிவில், “உன் கண்கள் என்னை பார்த்தாலே வார்த்தைகள் தேவையில்லை… ஆயிரம் காதல் கடிதங்கள் எழுதப்பட்டுக் கொண்டே இருக்கிறது போல உணர்கிறேன்” என்ற உணர்ச்சிப்பூர்வமான வரிகளையும் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களின் கவனத்தை மீண்டும் அபிராமி மீது திருப்பியுள்ளது. அபிராமியின் காதலர் யார், ஒருவழியாக வாழ்க்கைத் துணையை தேடிப் பிடித்து விட்டாரே என பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.