மொத்த கதையும் மாத்திட்டார்!.. வேட்டையன் தோல்விக்கு காரணமே ரஜினிதான்!…

ஜெய்பீம் என்கிற ஒரு நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படத்தை கொடுத்தவர் த.ச.ஞானவேல். சினிமாவுக்கு வருவதற்கு முன் பத்திரிக்கையாளராக இருந்தவர் இவர். ஜெய்பீம் படத்துக்கு இவர் அமைத்திருந்த கதை, திரைக்கதை சினிமா விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. எனவே ஞானவேல் அடுத்து இயக்கும் படத்தின் மீதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது..

ஆனால் அவரோ ரஜினியிடம் கதை சொல்லி ஒரு படத்தை இயக்கப்போனார். ஜெய்பீம் போன்ற படத்தை எடுத்த ஞானவேல் எதற்காக ரஜினியை வைத்து படமெடுக்கிறார் என்கிற கேள்வி பலருக்கும் எழுந்தது. ஏனெனில், ரஜினி பக்கா கமர்சியல் ஹீரோ, அவருக்கும் ஞானவேலுக்கும் எப்படி செட்டாகும் என என்கிற கேள்வி பலருக்கும் எழுந்தது..

ரஜினியை வைத்து வேட்டையன் என்கிற படத்தை இயக்கினார் ஞானவேல். இந்த படத்தில் அமிதாப்பச்சன், தசரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியார், ஃபகத் பாசில், ராணா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.. அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படம் 2024ம் வருடம் அக்டோபர் 10ம்
தேதி வெளியானது..

ஜெயிலர் எனும் சூப்பர் ஹிட் படத்துக்கு பின் வெளியான ரஜினி படம் என்பதால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.. நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தின் ரிசல்ட் பற்றி ஊடகம் ஒன்றில் பேசிய ஞானவேல் ‘வேட்டையன் படத்தின் முதல் காட்சி வெளியாவதற்கு முன்பே விஜய் ரசிகர்கள் படம் பிளாப் என ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்தார்கள்’ எனக் கூறியிருந்தார்..

இந்நிலையில்தான், ஒரு முக்கிய தகவல் வெளியே கசிந்திருக்கிறது.
உண்மையில் ஞானவேல் ரஜினிக்காக எழுதிய கதையை வேறு என்கிறார்கள்.. ஆனால் அதில் ‘அதை சேர்க்கலாம்.. இதை சேர்க்கலாம்.. இப்படி மாற்றலாம்.. அதை மாற்றலாம்’ என சொல்லி மொத்த கதையும் ரஜினி மாற்றிவிட்டாராம்.. அதோடு படத்தில் திருடனாக வந்து போலீசுக்கு உதவும் ஃபகத் பாசிலின் வேடமே ரஜினி கதையில் கொண்டு வந்ததுதான் என்கிறார்கள். ரஜினி தலையீட்டால்தான் வேட்டையன் படம் ஓடவில்லை என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

ரஜினியின் 173வது படத்திலிருந்து சிபி சக்ரவர்த்தி இயக்குவதாக இருந்தது. ஆனால்,முழுக்கதையையும் அவர் எழுதி முடித்த பின் ரஜினி பல மாற்றங்களை சொன்னதால் சிபி வெளியேறிவிட்டதாக சொல்லப்படுகிறது. அவருக்கு முன்பு சுந்தர்.சி-யு இப்படித்தான் அந்த படத்திலிருந்து வெளியேறியிருப்பார் என கருதப்படுகிறது..

முன்பெல்லாம் ரஜினி ஒரு கதையில் நடிக்க சம்மதித்து விட்டால் அதன்பின் கதையில் தலையிட மாட்டார். இயக்குனர் செல்வதை கேட்டு நடிப்பார்.. ஆனால் கூலி படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பின் ரஜினி கதையில் நிறைவே தலையிடுகிறார் என்கிற புகார் எழுந்திருக்கிறது..

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.