ஜனநாயகன் படத்தை பாத்தீங்களா? உங்களுக்கு எப்படி கிடைச்சது.? செய்தியாளர் கேள்வியால் தடுமாறிய பி.டி.செல்வகுமார்
விஜய் நடிப்பில் அவரது கடைசி படமாக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது ஜன நாயகன். ஹெ.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் மமீதா பைஜூ, பூஜ ஹெக்டே என பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்த இந்த படம் கடந்தபொங்கலுக்கு வெளிவ்யாவ்தக இருந்தது. ஆனால் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியிடும் காலம் தாமதமாகி வந்தது. தற்போது வரை கூட படத்திற்கு சான்றிதழ் கிடைக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடண்டஹ் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் ஜன நாயகன் முழு படமும் வெளியானது. இது திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாகியது. இது குறித்து ரஜினி , கமல் உள்ளிட்ட பல்ரும் தங்களது கண்டனங்களை தெரிவித்திருந்தனர். இந்த திருட்டு விவகாரம் தொடர்பாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தீவிர சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார் பேசியது பலரையும் முகம் சுளிக்க வைத்தது. அவர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான் ஜன நாயகன் படத்தை இன்று காலையில் தான் பார்த்தேன். அந்தப் பிரின்ட்டில், தெளிவாக எடிட்டர் வெர்ஷன் என்று எழுதப்பட்டுள்ளது. கண்டிப்பாக இந்தப் படம் எடிட்டர் வெர்ஷன் மூலமாகப் படக்குழுவிடம் இருந்து தான் வெளிநபர்களுக்குக் கசிந்திருக்க வேண்டும் என்று கூறினார்.
உடனடியாக குறுக்கிட்ட பத்திரிகையாளர்கள், ஜன நாயகன் திருட்டுப் பிரின்ட்டைப் பார்க்கக் கூடாது என்றும், மீறிப் பார்த்தாலோ அல்லது பகிர்ந்தாலோ சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுப்போம் என தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளதே… அப்படியிருக்க நீங்கள் எப்படி அந்தப் படத்தைப் பார்த்தீர்கள்? என்று கேள்விகளை எழுப்பினர்.
இந்தக் கேள்வியைச் சற்றும் எதிர்பாராத பி.டி.செல்வகுமார் உடனடியாகத் தடுமாறினார். ஆனாலும் தனது பேச்சை அப்படியே மாற்றி, இல்லை… இல்லை… நான் முழுப் படத்தையும் பார்க்கவில்லை. என்னிடம் சிலர் சில காட்சிகளை மட்டுமே கொண்டு வந்து காட்டினார்கள். அதைத்தான் நான் பார்த்தேன். தவிர, உலகம் முழுவதும் இன்று ஜன நாயகன் படத்தை எல்லாருமே பார்த்துவிட்டார்கள் என்று கூறி மழுப்பிச் சமாளிக்க முயன்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.