அப்ப சுந்தர்.சி.. இப்போ சிபி சக்ரவர்த்தி!.. கூலி படத்துக்கு பின் குழப்பத்தில் ரஜினி..

கடந்த பல வருடங்களாகவே இந்திய சினிமா அளவில் சூப்பர்ஸ்டாராகவும், வசூல் சக்கரவர்த்தியாகவும் வலம் வந்தவர் நடிகர் ரஜினி. சில படங்களை தவிர அவரின் எந்த திரைப்படம் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை கொடுத்ததில்லை. ஆனால் அவர் நடிப்பில் வெளியான பாபா அவருக்கு நஷ்டத்தை கொடுத்தது.

அதன்பின் 4 வருடங்கள் கழித்து அவரின் நடிப்பில் வெளியான சந்திரமுகி அவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. ஆனால், அதன்பின் வெளிவந்த லிங்கா, குசேலன், தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் வெற்றியை கொடுக்கவில்லை. கதை, திரைக்கதை, இயக்குனர், காட்சிகள் என எல்லாவற்றையும் பார்த்து பார்த்து சரியாக கணக்குப் போட்டு நடித்து வந்த ரஜினியால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை..

அதனால்தான் பல வருடங்களாகவே சீனியர் இயக்குனர்களின் படங்களில் மட்டும் நடித்துவந்த ரஜினி கடந்த பல வருடங்களாகவே இளம் இயக்குனர்களின் படங்களில் நடிக்க தொடங்கினார். அப்படி வெளிவந்த பேட்டை, ஜெயிலர் போன்ற படங்கள் அவருக்கு வெற்றியை கொடுத்தது
. ஒருபக்கம் ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் மாறினார்.. அதோடு விஜயின் படங்கள் ரஜினி படங்களை விட அதிக வசூலையும் குவித்தது. அதை ஏற்றுக்கொள்ளமுடியாத ஆதங்கத்தில்தான் ஜெயிலர் பட விழாவில் ரஜினி காக்கா -கழுகு கதையை சொன்னதாக சொல்லப்பட்டது..

அதேநேரம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான கூலி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இது ரஜினியை யோசிக்க வைத்திருக்கிறது.. ஒருபக்கம் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் ஜெயிலர் 2 படமும் பக்கா ஆக்சன் படம்தான்.

இதையடுத்து இனிமேல் ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் கொண்ட ஆக்சன் படங்கள் வேண்டாம்.. ஒரு குடும்ப பின்னணி கொண்ட ஒரு ஜாலியான, கலகலப்பான காமெடி படத்தில் நடிக்கலாம் என ரஜினி ஒரு நல்ல முடிவை எடுத்தார். அதனால்தான், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினியின் 173-வது படத்தை இயக்கும் வாய்ப்பு சுந்தர்.சிக்கு போனது.

ஆனால் ரஜினி என்ன மாறுதல் சொன்னாரே சுந்தர்.சி அந்த படத்திலிருந்து வெளியேறினார். அதன்பின் சிவகார்த்திகேயனை வைத்து டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்திதான் ரஜினியின் 173-வது படத்தை இயக்குகிறார் என ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.. கடந்த சில மாதங்களாக படத்திற்கான முழு கதையையும் சிபி சக்கரவர்த்தி உருவாக்கினார்.

cibi

இந்த படத்தில் டெய்லராக ரஜினி நடிப்பது போஸ்டரிலேயே சொல்லப்பட்டிருந்த்து. ஆனால் தற்போது இந்த படத்திலிருந்து சிபிச் சக்கரவர்த்தியும் விலகியிருக்கிறார். இந்த படத்தை டிராகன் படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கப் போகிறார் என செய்திகள் வெளியாகியிருக்கிறது..

சமீபத்தில் சிபி சக்கரவர்த்தியை அழைத்த ரஜினி ‘கதைப்படி இந்த படத்தில் நான் ஒரு Spy – உளவாளி. எனவே துரந்த 2 படம் போல ஒரு பக்கா ஆக்சன் படமாக கதையை மாற்ற முடியுமா?’ என கேட்டிருக்கிறார். அதைக்கேட்டு அதிர்ச்சியான சிபி சக்கரவர்த்தி ‘முழுக் கதையையும் எழுதி முடித்து விட்டேன்.. இனிமேல் நீங்கள் சொல்வது போல கதையை மாற்றுவது சிரமம்’ என சொல்ல அவரை தூக்கிவிட்டு அஸ்வத் மாரிமுத்துவை ரஜினி உள்ளே கொண்டு வந்திருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.

கூலி படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பின் ரஜினியின் நடவடிக்கைகளில் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். அவரால் ஒரு கதையை முழுமையாக நம்ப முடியவில்லை.. நிறைய தலையிடுகிறார். இயக்குனரிடம் அதை மாற்று.. இதை மாற்று என ரஜினி குழப்பத்தில் இருக்கிறார்’ என கோலிவுட்டில் பேச துவங்கியிருக்கிறார்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.