3 ஆண்டுகளாக பாக்கியராஜின் அலுவலக வாசலில் நடிகர்… அவரா இவர்?
விடாமுயற்சி நிச்சயமா வெற்றியைப் பெற்றுத் தரும்னு பல பெரியவங்க சொல்லி இருக்காங்க. அதற்கு உதாரணமான சம்பவம்தான் இது.
பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக சேரணும் என்பது ஜெகனின் பல நாள் கனவு. எப்படியாவது அவரிடம் சேர்ந்துடுறேன் பாருன்னு தன்னோட நண்பர்கள்கிட்ட சவால் எல்லாம் விட்டுருக்காரு. நண்பர் என்ன சொன்னாருன்னு தெரியுமா? உன்னால நிச்சயமா பாக்கியராஜ்கிட்ட உதவி இயக்குனரா சேர முடியாது. அப்படி மீறி நீ சேர்ந்துட்டேன்னு வச்சிக்க. என் தலையை மொட்டை அடிச்சிக்கிறேன் என்றாராம் அவர்.
அதுபோன்ற கேலியை எல்லாம் ஜெகன் பொருட்படுத்தவே இல்லை. தினமும் பாக்கியராஜ் வீட்டு வாசல்ல, அலுவலகத்துல நிப்பாரு. பாக்கியராஜ் சில நாள் இவரைப் பார்ப்பாரு. சில நாள்கள் பார்க்க மாட்டாரு. ஜெகன் தினமும் அவரோட வீட்டு வாசல்ல நிற்பது மட்டும் மாறவே மாறாது. இது ஒருநாள் அல்ல. 2 நாள் அல்ல. ஏறக்குறைய 3 வருஷமா பாக்கியராஜ் அலுவலக வாசலில் காத்து இருக்கிறார் ஜெகன்.

தினமும் அவரு வீட்டு வாசல்ல நிற்கிறார்னா பாக்கியராஜ் பார்க்க மாட்டாரா என்ன? என்ன உன் பிரச்சனைன்னு கேட்டார். உங்களிடம் உதவி இயக்குனராக சேர வேண்டும் என்று தன்னோட ஆசையைச் சொன்னார் ஜெகன். 3 வருஷமாகக் காத்து நிக்கிறாருன்னா இதுக்கு மேலயும் இவரை நிக்க வைக்கிறதுல அர்த்தம் இல்லைன்னு பாக்கியராஜ் அவரை உடனடியாக தன்னோட உதவியாளராக சேர்த்துக் கொண்டார்.
அவரிடம் சேர்ந்ததுல இருந்து ஜெகன் உழைத்த உழைப்பு அசாதாரணமானது. அதனால்தான் மிக விரைவிலேயே உதவி இயக்குனர் என்ற நிலையில் இருந்து இணை இயக்குனர் ஆனார். அதன்பிறகு ஒரு காலகட்டத்திலே பாக்கியராஜாலயே செம்புலி என்ற கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். அதன்பின்பு அவர் நாடறிந்த ஒரு நடிகராக இருப்பதும் எல்லோரும் தெரிந்த விஷயம்.
பாக்கியராஜ் உடன் ஜெகன் இணைந்து நடித்த ராசுக்குட்டி படத்தில் செம்புலியாக வந்து கலக்குவார் ஜெகன். குடையை பாக்கியராஜிக்குப் பிடித்த படி அவர் செய்யும் அலப்பறை ஒவ்வொன்றும் திரையரங்கை சிரிப்பலையால் அதிர வைக்கும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
