2026 பங்குனி மாத ராசிபலன்- தனுசு, மகரம், கும்பம், மீனம்

நியாயவாதியான தனுசு ராசியினரே

ராசி அதிபதி குரு வக்க நிவர்த்தி அடைவதால் இரக்கமும் தயாள குணமும், அள்ளிக் கொடுக்கும் வள்ளல் தன்மையும்,தெய்வ நம்பிக்கையும் ஏற்படும்.மனதில் தெம்பு , தைரியம் ஏற்படும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரப்போகிறது. நோய்கள், எதிரிகள் தொல்லைகளை தீரப்போகிறது. அடமான நகைகள் மற்றும் சொத்துக்களை மீட்கும் சந்தர்ப்பம் உருவாகும்.வாழ்க்கை, தொழில் முன்னேற்றத்திற்கு புதிய கடன் கிடைக்கும்.வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிட்டும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் அபாரமான தொழில் வளர்ச்சி ஏற்படும்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் பையை தூக்கிக் கொண்டு கோவில் குலம் என்று சுற்ற ஆரம்பித்து விடுவீர்கள். ஆன்மீக சொற்பொழிவு, பட்டி மன்றங்களில் கலந்து கொள்வீர்கள். தான தர்மங்கள் செய்து மட்டற்ற மகிழ்ச்சி அடைவீர்கள். புண்ணிய காரியங்கள் செய்வதில் ஆர்வம் மிகும். தர்ம ஸ்தாபனங்கள் நிர்ணயம் செய்வதில் ஆர்வம் பிறக்கும். நதிகளில், கடல்களில் புனித நீராடல் செய்து பெரும் பாக்கிய பலன்களை அதிகரிப்பீர்கள். மகான்களை தரிசிப்பது, சித்தர் ஜீவ சமாதிகளை போன்ற புண்ணிய வாய்ப்புகள் தேடி வரும். புண்ணிய ஸ்தலங்களை தரிசித்து மனம் ஆனந்தம் அடையும்.

சொத்து, வியாபாரத்தை பிரித்து பிள்ளைகளிடம் ஒப்படைத்து விட்டு நான் ஏன் பிறந்தேன்? .என் பிறப்பின் நோக்கம் என்ன? என் முன்னோர்கள் எனக்கு பாவம் சேர்த்துச் சென்றனரா? புண்ணியம் சேர்த்தவர்களா? என் சந்ததிகளை முன்னோர்களின் பாவத்திலிருந்து காப்பாற்ற முடியுமா? போன்ற கேள்விக்கு விடை காண முயல்வீர்கள். குல தெய்வம் , பூர்வீகம் தெரியாதவர்கள் அதனை தெரிந்து கொள்ள கடுமையான முயற்சிகளில் ஈடுபடுவார்கள். தந்தையின் உடல் நலம் சிறக்கும். ஆயுள் பலம் அதிகரிக்கும். நோயின் தன்மை புரியும். பூர்வீக தொழிலால் மிகப் பெரிய கெளரவம் கிடைக்கும்.

சிலர் பூர்வீகச் சொத்தை விற்று புதிய தொழில் ஆரம்பிப்பார்கள். மாணவ, மாணவிகள் உயர் கல்விக்காக வெளிநாடு செல்வார்கள். சிலர் மதம் மாறுவார்கள். இல் வாழ்க்கையில் விருப்பக் குறைவு ஏற்படும். தூக்கமின்மை இருக்கும்.ஆன்மீக நாட்டம் கூடும். திருமணத் தடை அகலும். நீண்ட வருடங்களாக தடைபட்ட திருமண முயற்சியில் சாதகமான திருப்பம் ஏற்படும். நல்ல மாப்பிள்ளை, நல்ல பெண்ணும் அமையும். சிலருக்கு கலப்புத் திருமணம் நடைபெறும். வசதியான நல்ல வாழ்க்கைத் துணை.அமையும். மறுமண யோகம் உள்ளது.கண், கண் புரை தொடர்பான நோய்க்கு சிகிச்சை செய்பவர்களுக்கு சிகிச்சை பலன் தரும். எதிரிகள் தொல்லை இருந்தாலும் பாதிப்பு எதிரிக்கே ஏற்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பெண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. தந்தையுடன் நல்ல புரிதல் ஏற்படும். பல வருடமாக தடைபட்ட விஷயங்கள் சுலபமாகவும் விரைவாகவும் நடந்து முடியும். அந்நிய தேசத்தில் வாழ விருப்பம் அதிகரிக்கும்.

குருமங்கள யோகம்

மிதுன ராசியில் சஞ்சரிக்கும் உங்களின் ராசியின் அதிபதியான குரு பகவானை 5,12ம் அதிபதியான செவ்வாய் தனது நான்காம் பார்வையால் பார்க்கிறார்கள். பொருளாதார முன்னேற்றம் பெருகும் வருடம். பல வருடங்களாக எதிர்பார்த்த வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். சிலருக்கு வெளியூர், வெளிநாட்டு வேலை வாய்ப்பு உருவாகும். உற்றார், உறவினர்கள் ஆதரவு, அனுசரனை கூடும். வாக்கால் வருமானம் பெருகும். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும். புதிய கூட்டுத் தொழில் முயற்சிக்கு ஏற்ற காலம். புதிய நட்பு வட்டாரம் உருவாகும்.தாய் தந்தையின் பிறந்த குலத்திற்கு பெருமை சேர்ப்பீர்கள். தாயாரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்க முயல்வீர்கள். வாகனம், நகைகள், விதவிதமான ஆடைகள் வாங்கி மகிழ்வீர்கள்.நிலம் விற்றல் , வாங்குதல் போன்ற பணிகள் சிறு தடை தாமதத்துடன் நடக்கும். நிலம் தோட்டம் வாங்கி விவசாயத்தில் புதுமையை புகுத்தும் எண்ணம் மிகும். விவசாயிகள் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பு தேடி வரும். பாசனத்திற்கு தேவையான நீர் கிடைக்கும்.

பொருளாதாரம்

பொருளாதார நிலையிலே மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். எதிர்பாரத தனவரவினால் ஏற்படும் மாற்றமும் ஏற்றமும் மன மகிழ்வை தரும்.விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். முயற்சி, எண்ணங்கள் பலிதமாகும். வீடு, வாகனம் ஆடம்பர பொருள் சேரும். இன்சூரன்ஸ், ஏலச் சீட்டு, வங்கி டெபாசிட் முதிர்வு தொகை கைக்கு வரும்.பணவரவில் இருந்த தடை, தாமதம் சீராகும். பணப் பற்றாக்குறைகள் அகலும். அநாவசிய ஆடம்பர செலவு செய்விட்டு பின்னர் சேமிப்பை பற்றி சிந்திப்பீர்கள்.

முதலீட்டாளர்கள்

தொழில் தொடர்பான முயற்சிகள் கைகூடும்.புதிய தொழில் ஒப்பந்தம் வந்து கொண்டே இருக்கும்.சுய தொழில் செய்பவர்களுக்கு பொருளாதார நிலையில் அவ்வப்போது சிறு சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் நீங்கள் சமாளித்து விடுவீர்கள்.பெரிய தொகையை கடன் பெற்று அதன் மூலம் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். நாளை வரப் போகும் வருமானத்திற்குரிய செலவு தொகை இன்றே செலவாகிவிடும். தொழில் நன்றாக இருந்தாலும் பெரிய லாபம் நிற்காது.தொழில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்து முடிவெடுக்க வேண்டும். தொழில் கூட்டாளிகளால் அவதி ஏற்படும்.புதிய தொழில் கூட்டாளிகளை சேர்க்க கூடாது. கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை.மன சஞ்சலம் மிகுயாக இருக்கும். மற்றபடி சுய தொழில் செய்பவர்களுக்கு தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். சிறு பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். உங்களது கடமைக்களை சிறப்பாக நிறைவேற்றி புகழ் அடைவீர்கள். மன திருப்தி கிடைக்கும். மேலதிகாரிளிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். இயன்றவரை வேலையை மாற்றம் செய்யாமல் இருப்பது புத்திசாலித்தனம். புதிய வேலைக்கு முயற்சி பலன் தரும் நல்ல வேலை கிடைக்கும். அலுவ லகத்தில் உங்களுக்கு தனி மதிப்பு மரியாதை உயரும்.

அரசியல்வாதிகள்

தசாபுத்தி சாதகமற்ற அரசியல் வாதிகள் களத்தில் இறங்கும் முன்பு சுய ஜாதகத்தை சரிபார்க்க வேண்டும். போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு எதிரிகளை வெல்ல பலம் பெற வேண்டும். ஒரு சிலருக்கு உஷ்ணம் தொடர்பான நோயால் குறுகிய கால பாதிப்பு இருக்கும். இது பொற்காலம். எனினும் கொடுத்த வாக்கை காப்பாற்ற அதிகமாக போராட நேரும். அசட்டுதனமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின் நாளில் வருந்தும் நிலை ஏற்படும்.

பெண்கள்

பெண்களுக்கு மிக சிறப்பான மாதமாக இருக்கப்போகிறது. குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் பிரச்சினைகள் முடிவிற்கு வரும். உடல் நிலை ஆரோக்கியமாக இருக்கும். மருத்துவ செலவுகள் குறையும்.தந்தை வர்க்கத்தால் பல நன்மைகள் ஏற்படும்.விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள். வாழ்க்கைத்துணை மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவி இடையே சுமூகமான உறவு நீடிக்கும். புத்திர பிராப்தம் சித்திக்கும்.எதிர்காலத் தேவைக்கான திட்டமிடுதல் சாதகமாகும்.நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். பணப் புழக்கத்திற்கு குறைவிருக்காது. பொன், பொருள் சேரும்.உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு நீங்கள் காணும் கனவுகள் பலிதமாகும் காலம்.

செவ்வாய் சனி சேர்க்கை

ராசிக்கு 4ம்மிடமான சுக ஸ்தானத்தில் உள்ள சனியுடன் 5,12ம் அதிபதி செவ்வாய் பங்குனி 19 (2.4.2026) அன்று இணைகிறார்கள். எதிர்காலத்தை பற்றிய பயஉணர்வு மிகுதியாகும்.சிலர் பரிகாரம் என்ற மூட நம்பிக்கையில் ஈடுபடுவார்கள். ஓடி ஓடி ஒளிந்தாலும் பிரச்சனை தேடித்தேடி வரும். தடை தாமதங்களை அதிகம் சந்திக்கும் காலம். கர்ம வினை அல்லது பரம்பரை நோய்க்கு சிகிச்சை செய்பவர்களுக்கு சிகிச்சை நல்ல பலன் தெரியும் .ஆயுள் பலம் உண்டு.வேற்று மதத்தினர் அல்லது புரியாத பாஷை அதிகம் பேசும் இடத்தில் குடியிருக்கும் நிலை ஏற்படும். மூத்த சகோதரர் உங்களுக்கு விட்டு கொடுப்பார்கள். உடன் பிறந்தவர்களின் ஒப்புதலுடன் பாகப்பிரிவினை நடக்கும். அவர்கள் மூலம் லாபம், சொத்துக்கள் கிடைக்கலாம்.வழக்குகளில் சாதகமான திருப்பம் ஏற்படும். பிள்ளைகளின் எதிர்கால முயற்சிகள் வெற்றி தரும். ஜனன கால ஜாதகத்தில் சாதகமான தசாபுத்தி இல்லாதவர்களுக்கு புனர் பூ தோஷம் ஏற்பட்டு ஜான் ஏறினால் முழம் சறுக்கும். மனத்தில் வெறுமை குடிபுகும். இது என்ன வாழ்க்கை என சந்யாநிசியாக போகி விடலாம் என்ற எண்ணம் ஏற்படும். நன்றி கெட்ட குடும்ப உறவுகளை நினைத்து மனம் வெதும்பும்.

பரிகாரம்

உடல் ஊனமுற்றோருக்கு கருப்பு கம்பளி தானம் வழங்க தொழிலில் ஸ்திர தன்மை உண்டாகி நல்ல லாபம் கிடைக்கும்.

சோதனைகளை சாதனைகளாக மாற்றும் மகர ராசியினரே

பொதுவாக ராசியையோ ராசி அதிபதியையோ எந்த கிரகமும் தொடர்பு கொள்ளாமல் இருப்பது மிக நல்லது.இந்த வகையில் பங்குனி மாதம் முழுவதும் ராசிக்கு எந்த கிரகத்தின் பார்வையும் இல்லை. இது மகர ராசிக்கு திறமையை மெருகேற்றி கொடுக்கும் அமைப்பாகும்.கோட்ச்சார சந்திரன் மட்டும் ராசியை கடப்பார் அல்லது பார்ப்பார். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். உரிய நேரத்தில் சாப்பிட முடியாமல் அதிகமாக உழைக்க நேரும்.விருந்து உபசாரங்கள், கேளிக்கைகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

அசையும், அசையா சொத்து வாங்குவது, விற்பது பராமரிப்பது போன்ற காரியங்களில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். அலைச்சல் மிகுந்த பயணங்கள், பொருளாதாரத்தில் ஏற்றத் தாழ்வு சிறிய தடை தாமதங்கள் இருந்தாலும் வெற்றி நிச்சயம். பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சியை அதிகரிக்கும். உடல் உபாதைகள் இருந்தால் உரிய சிகிச்சையை பெற வேண்டும்.மகன், மகளுக்கு எதிர்பார்த்திருந்த வேலை கிடைக்கும். பெண்களுக்கு அழகு, ஆடம்பர பொருட்கள், தங்க நகைகள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு.வாடிக்கையாளர்கள் ஆதரவு கரம் நீட்டுவார்கள்.தடைபட்ட சகோதர சகோதரிகளின் திருமண முயற்சி வெற்றியாகும்.

பிறவிக் கடன் மற்றும் பொருள் கடன் தீர்க்க முயற்சிப்பீர்கள்.நீண்ட காலமாக குழந்தை இல்லாதவர்கள் செயற்கை கருத்தரிப்பு முறையை அணுகலாம். பிள்ளைகளுக்கு திருமணம் செய்தல் பேரன் பேத்தி எடுத்து அடுத்த தலைமுறையை உருவாக்குதல் போன்ற சுப பலன்கள் நடக்கும். நண்பர்கள் மூலமாக வீண் அலைச்சலும் காரியத்தடையும் உண்டாகும். தொழில் லாபமும் ஏற்றமும் உறுதி. கையிருப்பில் இருக்கும் சரக்குகளின் மதிப்பு உயரும். திருமணத் தடை அகலும். தடைபட்ட சுப காரியங்கள் சிறப்பாக நிறைவேறும். பலருக்கு சடங்கு சம்பிரதாயங்களை கடைபிடிக்காத காதல் கலப்பு திருமணமாகவே இருக்கும். காதல் திருமணத்திற்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும்.

இதனால் குடும்ப உறுப்பினர்களிடையே சிறு சலசலப்பு மன சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும். இது போன்ற காரணங்களால் தந்தை மகன் உறவிலும் விரிசல் ஏற்பட்டு குடும்பம் பிரியும். தம்பதிகளின் உறவில் அந்நோன்யம் நீடிக்கும். அனைத்து விதமான நல்ல முயற்சிகளும் பலிதமாகும். அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்கள் பல மடங்கு ஆதாயம் தரும். உயில் எழுதுவதை சிறிது காலத்திற்கு தள்ளிப் போடவும். சொத்துக்களின் விற்பனை சாதகமாகும்.பிள்ளைகளின் சுப நிகழ்விற்கான பேச்சு வார்த்தை நடக்கும்.மனதிற்குப் பிடித்ததை பிடித்தபடி செய்வீர்கள். அதனால் சில செலவுகளும் வரும்.கூட்டுத் தொழில் புரிபவர்கள் பொறுமை, நிதானத்துடன் இருக்க வேண்டும். தாய், தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.மாணவர்கள் நல்ல நண்பர்களுடம் நட்பு வைக்க வேண்டும். கூடா நட்பு கேடில் முடிந்து கெட்ட பெயர் எடுத்து தரும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

குருமங்கள யோகம்

மகர ராசிக்கு 3 ,12 ஆம் அதிபதியான குரு பகவானை 4,11ம் அதிபதியான செவ்வாய் தனது நான்காம் பார்வையினால் பார்ப்பது குருமங்கள யோகமாகும்.சிலருக்கு அரசின் தொகுப்பு வீடு கிடைக்கும். சொத்து வாங்குதல் விற்றல் போன்றவற்றின் மூலம் அபரிமிதமான லாபம் கிடைக்கும் ரியல் எஸ்டேட்,கட்டுமான துறையில் பணிபுரிபவர்களின் வாழ்வாதாரம் உயரும்.புதிய வாகனம் வாங்குதல் அல்லது நிலத்தில் முதலீடு செய்தல் போன்ற அமைப்பு உருவாகும். சிலருக்கு புதிய நகைகள், ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.வெளிநாட்டு வேலைக்கான முயற்சி சித்திக்கும்.சிலருக்கு தொழிலில் சகோதரருடன் பிரிவினை ஏற்படும். சிலருக்கு இளைய சகோதரரின் குடும்பத்தை பராமரிக்கும் நிலை ஏற்படும். பாகப்பிரிவினை நடக்கலாம். காணாமல் போன கை மறதியாக வைத்த ஆவணங்கள் கிடைக்கும். ஆன்லைனில் பொருள் வாங்கும் மோகம் அதிகமாகும்.தேவையற்ற சிந்தனைகளை தவிர்த்து யோகா, மெடிடேசன் , உடற்பயிற்சி, தியானம் போன்ற விஷயங்களில் மனதை செலுத்த வேண்டும்.

பொருளாதாரம்

தேவைக்கு மிகுதியாகவே வருமானம் கிடைக்கும்.கடனைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. ஏதாவது ஒரு வழியில் ரொட்டேஷன் செய்து தங்களை காப்பாற்றிக் கொள்வார்கள்.வரவும் செலவும் சமமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.