தூள்கிளப்பும் தாய்கிழவி: 12 நாள் வசூல் நிலவரம்

தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்கள் இல்லையென்றால் படம் ஓடாது என்ற பிம்பத்தை உடைத்து எறிந்திருக்கிறார் மூத்த நடிகை ராதிகா சரத்குமார். அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ‘தாய்கிழவி’ திரைப்படம் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி வெளியாகி, தற்போது வசூல் வேட்டையாடி வருகிறது.

வெறும் 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடம் பயங்கர வரவேற்பைப் பெற்றது. 10 நாட்களிலேயே ரூ. 50 கோடி கிளப்பில் இணைந்த நிலையில், தற்போது 12-வது நாள் முடிவில் உலகளவில் ரூ. 56.5 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஒரு பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட படம் இந்த அளவுக்கு வசூலிப்பது கோலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடைசி விவசாயி பட இயக்குநர் மணிகண்டனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சிவகுமார் முருகேசன், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். கிராமத்து மனிதர்களின் இயல்பான நகைச்சுவை, பேராசை என அனைத்து உணர்வுகலையும் சொன்ன விதம் ரசிகர்கலை வெகுவாக கவர்ந்தது. இவரது திறமையைப் பார்த்து வியந்த சிவகார்த்திகேயன் தனது அடுத்த இரண்டு படங்களை இயக்கும் வாய்ப்பையும் இவருக்கே வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.