2026 சனிப்பெயர்ச்சி பலன்கள்- மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்
மேன்மைமிகு மேஷ ராசியினரே
தற்போது கோட்சாரத்தில் ராசிக்கு 12ம் மிடமான மீன ராசியில் சனிபகவான் சஞ்சரிப்பதால் உங்களுக்கு ஏழரைச் சனியாக பலன் தருவார். தனது 3ம் பார்வையால் 2ம்மிடமான தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தையும் 7ம் பார்வையால் 6ம்மிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தையும் 10ம் பார்வையால் 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்தையும் பார்ப்பார்.
ஏழரை சனியின் ஆரம்பம். தற்போது மீனம் ராசியில் பயணிக்கும் சனி பகவான் மீனம் மேஷம் ரிஷப ராசியை கடக்கும் வரை உங்களுக்கு ஏழரை சனியின் தாக்கம் ஏற்படும். பள்ளிப் பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு, மிகுந்த வைத்திய செலவு படிப்பில் ஆர்வமின்மை இருக்கும். மத்திம வயதினருக்கு திருமணம், குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு, தொழில் முன்னேற்றம் வீடு வாகன யோகம் போன்ற சுப நிகழ்வுகள் நடைபெறும். வயோதிகராக இருந்தால் தோற்றப் பொலிவு குறைந்து உடல் பலவீனம் , கை, கால் வலி இருக்கும். சோர்வும், தளர்ச்சியும் மிகுதியாக இருக்கும். தற்போது 3வது சுற்று ஏழரை சனியின் பிடியில் இருக்கும் வயோதிகர்களுக்கு பொருளாதார நெருக்கடி இருக்கும். ஆரோக்கிய குறைபாடுகள் மனதை பலவீனப்படுத்தும். எனினும் ஆயுள் சிறப்பாக இருக்கும் என்பதால் எந்த பயமும் வேண்டாம்.
விரயச் சனியின் பொதுவான பலன்கள்
மேஷ ராசிக்கு தொழில் ஸ்தான அதிபதி மற்றும் லாப ஸ்தான அதிபதியான சனி பகவான் பனிரெண்டாமிடமான விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். 12-ம் இடம் என்பது விரயம், பிரிவினை, அயன சயனம், முதலீடு செய்தல் கால்கள் போன்ற காரகத் துவங்களை குறிக்கும். பலருக்கு முதலீடே காணாமல் போய்விடும். அதிக முதலீட்டில் தொழில் செய்பவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். புதிய தொழில் முதலீடு , புதிய தொழில் ஒப்பந்தம் செய்பவர்கள் நம்பிக்கையான வாடிக்கையாளர்களை பயன்படுத்தினால் முதலீட்டை காப்பாற்றலாம். இந்த சனிப்பெயர்ச்சியில் பெரும்பான்மையாக அனுபவிக்கப் போகும் பிரச்சனை விரயம். கடுமையான விரயமாக இருக்கும். வருமானத்திற்கு மீறிய செலவு ஏற்படும். அத்தியாவசிய தேவைக்கு கடன் பெற்றே ஆக வேண்டிய சூழல் உருவாகலாம்.
நாளைய வருமானத்திற்குரிய செலவு இன்றே முடிவு செய்யப்படும். எனவே விரயத்தை சுபமாக மாற்ற ஒருவரின் அவசிய தேவையான வீடு, வாகன யோகத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். ஏற்கனவே சொந்த வீட்டில் இருப்பவர்கள் வீட்டிற்கு பராமரிப்பு வேலை செய்து புதிதாக மாற்றலாம். சற்று வசதி அதிகமாக இருப்பவர்கள் குடியிருப்பு வீடுகள் கட்டி வாடகைக்கு விடலாம். இரண்டு சக்கர வாகனம் வைத்து இருப்பவர்கள் நான்கு சக்கர வாகனம் வாங்கலாம். சிலர் பிழைப்பிற்காக வெளியூர் , வெளி மாநிலம் அல்லது வெளிநாடு செல்ல நேரும். பலருக்கு இந்த வாய்ப்பு திருப்பு முனையாகவும் இருக்கும். மனதில் தேவையற்ற எண்ணங்களை அசை போட்டு தூக்கமே இல்லாமல் இருக்க செய்யும். சிலர் துக்கம் தாளாமல் மன நிம்மதி தரும் ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று சென்று முக்திக்கு முயல்வார்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும்.
அதற்கான வைத்திய செலவு கட்டுக்கடங்காமல் இருக்கும். மேலும் ஏழரை சனியின் காலத்தில் தான் ஆணிற்கு குடும்பம் என்றால் என்ன? மனைவி குழந்தைகளுக்கு ஒரு மனிதன் நிறைவேற்ற கடமைகள் என்ன? உழைப்பின் அவசியம், உழைப்பால் உயரும் நெறி முறை போன்ற பல்வேறு வாழ்க்கை தத்துவத்தை சனி புரிய வைப்பார்? பெண்களுக்கு கணவர், புகுந்த வீட்டாருடன் எப்படி அனுசரித்து வாழ்வது? கணவனின் பொருளாதாரத்தில் எப்படி குடும்பம் நடத்த வேண்டும், குழந்தைகளை எப்படி பராமரிக்க வேண்டும் போன்ற பல்வேறு இல்வாழ்க்கை உண்மைகளை புரிய வைப்பார். ஆக மொத்தத்தில் விரய ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் குடும்பம், வாழ்க்கை தத்துவம், பாவம், புண்ணியம் ஆகியவற்றின் நன்மை தீமைகளை உணர வைப்பார்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊர் விட்டு ஊர் மாற நேரும். ஒரு சிலர் நாடு விட்டு நாடும் மாறலாம். விரும்பிய பதவி உயர்வு தேடி வந்தாலும் பணிச் சுமை உங்களை வாட்டும். அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, புதிய சலுகைகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அரசியல்வாதிகளுக்கு மேலிடம் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பகை உணர்வு மேம்படும். அரசியலை விட்டு ஒதுங்கி விட வேண்டும் என்ற எண்ணம் மிகும். கலைத் துறையினர் சக நடிகர் நடிகைகளிடம் எச்சரிக்கையுடன் பழக வேண்டும். அதிக தொகை சம்பளம் கேட்டு வாய்ப்யை இழக்க நேரும். தயாரிப்பாளர்கள் அதிக முதலீடுகள் செய்து படம் எடுக்கும் முயற்சியில் இறங்க வேண்டும்.
மூன்றாம் பார்வை பலன்கள்
சனி பகவான் தனது 3ம் பார்வையால் தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் பொருளாதர வளர்ச்சியில் ஏற்றத்தாழ்வு மிகுதியாக இருக்கும். வாக்கு ஸ்தானத்திற்கு சனி பார்வை என்பதால் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். பேச்சை குறைக்க வேண்டும். வாக்கில் நிதானம் தேவை. நீங்கள் எதார்த்தமாக பேசும் வார்த்தைகள் கூட சொல் அம்பாக மாறும். முன் யோசனை இல்லாத அவசரத்தனமான பேச்சு மற்றவர்களுக்கு மன வருத்தத்தை தரும் விதமாக இருக்கும். பொறுமையாக நிதானமாக இருக்க வேண்டிய காலம் . ஆரம்ப கல்வியில் அடியெடுத்து வைக்கும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் விரும்பும் பள்ளியில் சேர்க்க அதிக நன்கொடை கொடுக்க நேரும்.
ஒரு சில குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மறுக்கும். வேறு பள்ளிக்கு மாற்றம் செய்ய நேரலாம். பள்ளி, மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் படிக்கும் வேலை மட்டும் பார்த்தால் எதிர்காலம் சிறக்கும். சிலர் ஹாஸ்டலில் தங்கி படிக்க நேரும். பச்சிளம் குழந்தைகளுக்கு பேச்சுவர கால தாமதமாகும். எனவே வைத்திய செலவு செய்து மனவருத்தம் அடைய வேண்டாம். இதுவரை குழந்தை பாக்கியத்திற்கு ஏங்கிய மேஷ ராசி தம்பதிகளுக்கு குலம் தழைக்க வாரிசு கிடைக்கும். பேச்சை தொழிலாக கொண்டவர்களின் வாழ்வாதாரம் உயரும். மேடை பேச்சாளர்கள் ஆசிரியர்கள், அரசியல்வாதிகள் மிகவும் கவனத்துடன் பேச வேண்டும்.
ஏழாம் பார்வை பலன்கள்
சனியின் 7ம் பார்வை ராசிக்கு 6ம்மிடமான ருண, ரோக சத்ரு ஸ்தானத்தில் பதிவதால் சிலருக்கு சுகர், பிபி போன்ற நீண்ட நாள் மருத்து சாப்பிடும் நோயின் அறிகுறி தென்படும். ஆரோக்கிய குறைபாடு இருப்பவர்கள் உரிய மருத்துவ பரிசோதனை செய்து உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். சிலர் பழைய கடனை அடைக்க புதுக்கடன் வாங்க நேரும். அல்லது தொழில் விரிவாக்கம், வீடு கட்டும் பணி, குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற தேவைக்கும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஏழரை சனியின் காலம் என்பதால் மீட்டர் வட்டி, கந்து வட்டி வாங்கி வீண் ஆபத்தை அதிகரிக்காமல் உண்மையான தேவைக்கு அரசு வங்கிகளின் உதவியை நாட வேண்டும். கடன் வாங்கும் முன் பத்திரத்தில் கையெழுத்திடும் முன் பல முறை வாசித்து,யோசித்து கையெழுத்து போடவும். பண ஏமாற்றம், இழப்பு ஏற்படும் காலம் என்பதால் சாட்சி கையெழுத்து, ஜாமீன் கையெழுத்து, கேரண்டி கையெழுத்து போன்றவற்றில் விழிப்புடன் செயல்பட வேண்டும். மேலும் இந்த காலகட்டத்தில் உங்களின் உண்மையான நண்பன் யார்? நண்பராக நடித்து ஏமாற்றுபவர் யார்? என இனம் காணமுடியும். உற்றார் உறவினர்களிடம் பகைமையை வளர்க்காமல் அனுசரித்து செல்வதால் பிற்காலத்தில் பெரிய பாதிப்புகள் வராது.
பத்தாம் பார்வை பலன்கள்
சனியின் 10ம் பார்வை ராசிக்கு 9ம் இடத்தில் பதிவதால் நீங்கள் எந்த துறையில் பணி புரிகிறீர்களோ அந்த துறையில் சாதனை செய்து புகழ் அடைவீர்கள். கணவன் மனைவி உறவு மகிழ்வை தரும் விதமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும். வாழ்க்கை துணையால் நல்ல மாற்றமும் ஏற்றமும் உண்டு. முன்னோர்கள் கடைப்பிடித்த கொள்கையில் மாறுபட்ட கருத்துகள் உண்டாகும். தந்தை வழி முன்னோர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு அதிகரிக்கும். பூர்வீகம் தொடர்பான பிரச்சனைகள் மன வருத்தத்தை தரும்.கோட்ச்சாரம் உங்களுக்கு சாதகமாக இல்லாத காரணத்தால் கோர்ட், கேஸ், போலீஸ் ஸ்டேசன் செல்லாமல் பேசி சமரசமாக பிரச்சனைய முடிப்பது புத்திசாலித்தனம். நீண்ட நாட்களாக தீர்க்க முடியாத அலைக்கழித்த சட்டம் தொடர்பான பிரச்சனைகள் தொடர்கதையாக இருக்கும். ஆராய்ச்சி உயர் கல்வி படிப்பவர்கள் மேற்படிப்பை தொடரலாம். சிலருக்கு வெளிநாடு சென்று ஆராய்ச்சி படிப்பை தொடர வாய்ப்பு ஏற்படும். ஒரு சிலருக்கு மனோதத்துவ நிபுணரை சந்திக்க நேரும்.பித்தம், வாதம், கபம் தொடர்பான நோய்கள் ஏற்படும். நோயின் தன்மை புரியாமல் பல மருத்துவர்களை சந்திக்க நேரும்.
திருமணம்
ஒரு ஜாதகத்தில் எவ்வளவு விதமான தோஷங்கள் இருந்தாலும் ஏழரைச் சனியின் காலத்தில் அந்த பாதிப்புகள் செயலற்று போகும். தற்போது உங்களுக்கு ஏழரை சனி நடப்பதால் திருமணத் தடை அகன்று திருமணத்திற்கான முயற்சி பலிதமாகும். பலருக்கு காதல் திருமணம் நடக்கும். காதல் திருமணம் செய்தோர் குடும்பத்தை விட்டுப் பிரிய நேரும். மறுமணம் கைகூடும்.
பெண்கள்
எந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க வேண்டும் என்ற நிதானம் இல்லாமல் மன குழப்பம் வரும். பெண்களுக்கு கால்வலி, வயிறு உபாதை மற்றம் முதுகு வலியால் அவஸ்தை ஏற்படும். ஒரு சிலர் பணத்தேவையை சமாளிக்க முடியாமல் அல்லது அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு முடியாமல் குறுகிய காலத்தில் பணத்தை பன்மடங்காக பெருக்கி தரும் பணமோசடி நபர்களிடம் பணத்தை இழக்கலாம். மிகச் சுருக்கமாக பண இழப்பு, ஏமாற்றம் எந்த வழியில் வேண்டுமா னாலும் வரலாம். முறையான திட்டமிடுதலும் , நேர்மையும், இறைநம்பிக்கையும் இருந்தால் எத்தகைய கிரகப் பெயர்ச்சியாலும் உங்களை அசைக்க முடியாது.
பரிகாரம்
ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரவும். சனி பிரதோஷ வழிபாடு செய்வது மிகச் சிறந்தது.
ஆடம்பரமான ரிஷப ராசியினரே
தற்போது கோட்ச்சாரத்தில் ராசிக்கு 11ம் இடமான லாப ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிக்கிறார். தனது 3ம் பார்வையால் உங்கள் ராசியை பார்க்கிறார். 7ம் பார்வையால் 5-ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் 10ம் பார்வையால் 8ம் மிடமான ஆயுள் வம்பு, வழக்கு ஸ்தானத்தையும் பார்வை இடுவார்.
ரிஷப ராசிக்கு பாக்கியாதிபதி மற்றும் தொழில் ஸ்தான அதிபதியான சனி பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது ரிஷப ராசிக்கு மேன்மையான பலன்களை தரக்கூடிய அமைப்பாகும். ஒரு மனிதனுக்கு வாழ்நாளில் பொற்காலம் என்று சொல்லக் கூடிய காலம் கோட்ச்சாரத்தில் 3,6,11ம் இடத்தில் வருட கிரகங்கள் சஞ்சரிக்கும் காலமாகும். இப்பொழுது அந்த பொற்காலம் உங்களுக்கு ஆரம்பமாகி விட்டது. மகாலஷ்மி தாயார் உங்களுக்கு வேண்டிய வரத்தை அருள உள்ளார். எண்ணங்கள் விருப்பங்கள் லட்சியங்கள் கனவுகள் நிறைவேறும் காலமாகும். உங்கள் தேவைகளையும் விருப்பங்களையும் பட்டியலிட்டு ஒவ்வொன்றாக நிறைவு செய்து கொள்ளலாம்.
லாபச் சனியின் பொதுவான பலன்கள்
பொருளாதார நிலையில் மிக உன்னதமான நிலையை அடைவீர்கள். கடன் பிரச்சனையில் இருந்து முற்றிலும் நிவாரணம் கிடைக்கப்பெறு வீர்கள். வட்டிக்கு வட்டி கட்டி மீள முடியாமல் தவித்தவர்கள் நிம்மதி பெரு மூச்சு விடும் நேரம். வறுமையில் வாடியவர்களுக்கு வாழ்வில் வசந்தம் வீசும். இந்தக் கோட்ச்சார நிலவரம் பொருளாதார வளர்ச்சியையும் ஏற்றத்தையும் தரக்கூடிய அமைப்பாகும். பங்குச் சந்தை, லாட்டரி போன்ற அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வம் கூடும். மன நிம்மதியை குறைத்த கடன் பிரச்சனை ஓரளவு குறையும். கடந்த கால இழப்புகளை ஈடு செய்யும் விதத்தில் தொழிலில் உயர்வு உண்டாகும். சிலருக்கு தாத்தா மூத்த சகோதர,சகோதரி மூலம் நிதி உதவி கிடைக்கலாம். சொத்துக்கள் வாங்கும் யோகம் உள்ளது. எதிர்கால தேவைக்காக அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்வீர்கள்.
பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு இது மேன்மையான காலம். அதிகாரப் பதவிகள் தேடி வரும். மந்திரி பதவியை எதிர்பார்த்தவர்களுக்கு சட்டசபை பாராளுமன்றத்தில் நுழையும் வாய்ப்பு கிடைக்கும். ஆனந்தமான நேரமாகும். வெளி உலகத்திற்கும் , கட்சி மேலிடத்திற்கும் தெரியாத உங்கள் மக்கள் சேவை தெரியத் தொடங்கும். கட்சியின் உயர் பதவிக்கு தகுந்த நபர் நீங்கள் தான் என அறிந்து முக்கிய பதவிகளுக்கு உங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும். மேலிடத்தின் ஆதரவால் பொதுக் கூட்டம், மாநாடு நடத்தி மக்கள் மனதில் நீங்காத இடம் பெறுவீர்கள். இந்த 2026ம் ஆண்டு தேர்தலில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடுவீர்கள். மக்களின் அன்றாட பிரச்சனைகளை தீர்க்க முனைப்பாக செயல்படுவீர்கள். உங்களின் பெயரில் இருந்த புகார் மனுக்கள், ஊழல், தேர்தல் வழக்குகள் அனைத்திலும் சாதகமாக தீர்ப்பு வரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.
சொந்த தொழில் ஆரம்பிக்க விரும்புபவர்களுக்கு விரும்பிய தொழில் வாய்ப்பு தேடி வரும். பல ரிஷப ராசியினர் புதியதாக தொழில் துவங்குவார்கள். புதிய தொழில், தொழில் கிளைகள், தொழில் விரிவு செய்ய ஏற்ற நேரம். தொழிலில் இருந்த சிக்கல்கள் நீங்கும். அரசின் திட்டங்கள், மானியம், உதவி தொகை தேடி வரும். தொழிலாளர்கள் நட்பு கரம் நீட்டி உற்பத்தியை பெருக்குவார்கள். தொழில் கூட்டாளிகளிடையே இருந்த கருத்து வேறுபாடு ந
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.