அரையிறுதியில் நன்றாக விளையாடனும்: விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்த அபிஷேக், இஷான், அக்சர் #T20 World Cup Semi final

டி20 உலகக் கோப்பையில் முதல் அரையிறுதி போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கிறது. இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்கா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், அக்சர் படேல் ஸ்ரீ சித்திவிநாயகர் கணபதி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

சூப்பர் 8 சுற்றில் இந்தியா குரூப் 1-ல் 2-வது இடம் பிடித்தது. இங்கிலாந்து குரூப் 2-ல் முதல் இடம் பிடித்தது. இந்தியா குரூப் 1-ல் தென்ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்தது. இங்கிலாந்து 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றது.

#WATCH | Mumbai, Maharashtra: Members of Indian Cricket Team offered prayers at Shree Siddhivinayak Ganapati Temple. The team will face England in the semi-final match of #ICCT20WorldCup2026 tomorrow at Wankhede Stadium in Mumbai. (Video Source: Siddhivinayak Temple Trust) pic.twitter.com/DkcTfOspSd

— ANI (@ANI) March 4, 2026

இந்த மூன்று பேரும் டி20 உலகக் கோப்பையில் மிகப்பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதனால் கடவுள் ஆசீர்வாதத்திற்காக கோவில் சென்றுள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.