விமானங்கள் ரத்து: வெஸ்ட்இண்டீஸ், ஜிம்பாப்வே வீரர்கள் நாடு திரும்ப முடியாமல் தவிப்பு
20 ஓவர் உலகக் கோப்பையில் விளையாடிய வெஸ்ட்இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகள் சூப்பர் 8 சுற்றில் தோற்று அரைஇறுதி வாய்ப்பை இழந்தன.
மத்திய கிழக்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் பதட்ட சூழ்நிலையால் இந்த இரு நாட்டு அணி வீரர்களும் நாடு திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள். விமான சேவை ரத்தானதால் வெஸ்ட்இண்டீஸ், ஜிம்பாப்வே வீரர்கள் இந்தியாவிலேயே தங்கி இருக்கிறார்கள்.
உடனடியாக நாடு திரும்பும் அவசியம் இல்லாவிட்டாலும் பாதுகாப்பான பயணத்துக்கான மாற்று ஏற்பாடு குறித்து ஆய்வு செய்து வருவதாக ஐ.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


