நாளை சந்திர கிரகணம்!. என்ன செய்ய வேண்டும்?..
சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும்போது தோன்றும் நிகழ்வுதான் சந்திர கிரகணம்.. அந்த வகையில் நாளை சந்திர கிரகணம் நிகழவிருக்கிறது..
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி நாளை நடைபெறவுள்ள முழு சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும். எனவே, இதை தவறவிடாதீர்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.. எனவே, சந்திர கிரகணத்தை பார்க்க பலரும் ஆவலுடன் இருக்கிறார்கள்.
இந்நிலையில், சமஸ்கிருத அடிப்படையில் சந்திரகிரகண நிகழ்வை பெரும்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் பின்வருமாறு கணித்திருக்கிறார்.
சந்திர கிரஹணம்
03.03.2026
மாசி 19ம் தேதி
செவ்வாய்கிழமை
கிரஸ்தோதய சந்திர கிரஹணம்
கேது கிரஸ்தம்
தூம்ரவர்ணம்
ஈசான்யத்தில் ஸ்பர்ஷம்
வாயுவில் மோக்ஷம்
கிரஹண ஆரம்பம் - பகல் மணி 03:20
கிரஹண மத்திமம் - பகல் மணி 05:03
கிரஹண முடிவு - மாலை மணி 06:47
பூரம் நக்ஷத்ரத்தில் கிரஹணம் நிகழ்கிறது.
காலை 9 மணிக்குள் போஜனம் செய்ய வேண்டும். பௌர்ணமி ஸ்ரார்த்தர்த்தை மறுநாள் செய்ய வேண்டும். மகம் - பூரம் - உத்திரம் - பரணி - பூராடம் நக்ஷத்ரகாரர்கள் சாந்தி செய்ய வேண்டும்.
கர்ப்பஸ்தீரிகள் வெளியில் வரக்கூடாது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


