பர்கான்- ஃபகர் ஜமான் ஜோடி அதிரடி: இலங்கைக்கு 213 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்
டி20 உலகக் கோப்பையில் கண்டியில் நடைபெற்று வரும் சூப்பர் 8 போட்டியில் குரூப் 2-ல் இடம் பிடித்துள்ள பாகிஸ்தான்- இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது.
அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமென்றால் இந்த போட்டியில் பாகிஸ்தான் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலை இருந்தது.
சஹிப்சதா பர்கான், ஃபகர் ஜமான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பவர்பிளேயில் இந்த ஜோடி 64 ரன்கள் குவித்தது. 9.5 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.
ஃபகர் ஜமான் 27 பந்திலும், ஹகிப்சதா பர்ஹான் 32 பந்திலும் அரைசதம் விளாசினார். பாகிஸ்தான் 14 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது.
இருவரும் சதம் நோக்கி சென்றனர். இறுதியாக ஃபகர் ஜமான் 42 பந்தில் 9 பவுண்டரி, 4 சிக்சருடன் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 15.5 ஓவரில் 176 ரன்கள் குவித்தது.
2-வது விக்கெட்டுக்கு பர்கான் உடன் கவாஜா நஃபே ஜோடி சேர்ந்தார். நஃபே 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
சஹிப்சதா பர்கான் அரைசதத்தை சதமாக மாற்றினார். அவர் 59 பந்தில் சதம் விளாசினார். அவரது சதத்தில் 9 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். தொடர்ந்து விளையாடிய அவர் 60 பந்தில் 100 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்துள்ளது. இலங்கையை 147 ரன்னுக்குள் கட்டுப்படுத்தினால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


