அஜித்தை வச்சி எடுக்கும் படம் வேறவெல்ல இருக்கும்!.. ஹைப் ஏத்தும் SK..

தொலைக்காட்சியில் ஆங்கராக பணிபுரிந்து அதன்பின் சினிமாவில் நுழைந்து தனக்கான ஒரு தனி இடத்தை பிடித்தவர்தான் சிவகார்த்திகேயன்.
சில வருடங்களிலேயே தனக்கு முன்னால் சினிமாவுக்கு வந்த பல சீனியர் நடிகர்களையும் ஓரங்கட்டி அவர்களை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார்..

சினிமாவில் ஹீரோவாக வளரும்போதே தயாரிப்பாளராகவும் மாறினார்.. அவர் நடித்த சில படங்களை அவரே தயாரித்தார்.. அதில் அவருக்கு 100 கோடி வரை கடன் வரவே அதை நிறுத்திவிட்டு சின்ன பட்ஜெட் படங்களை மட்டும் தற்போது தயாரித்து வருகிறார்.. அப்படி அவரின் தலைப்பில் நேற்று வெளியான திரைப்படம்தான் தாய் கிழவி.

இந்த படத்தை சிவக்குமார் முருகேசன் இயக்க ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது
. இந்நிலையில் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது ‘அஜித்தை வைத்து நீங்கள் படம் தயாரிப்பீர்களா?’ என ஒருவர் கேள்வி எழுப்பினார்..

அதற்கு பதில் சொன்ன சிவகார்த்திகேயன் ‘அந்த அளவுக்கு என்னுடைய நிறுவனம் பெரிய நிறுவனம் அல்ல.. நாங்கள் சின்ன சின்ன பட்ஜெட்டில் படங்களை எடுத்து வருகிறோம்.. அஜித் சாரை வைத்து படமெடுக்கும் வாய்ப்பு கிடைத்தால் செய்வோம். அது வேற லெவலில் இருக்கும்.. அது எனக்கு கனவுதான்’ என பதில் சொல்லியிருக்கிறார்..

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.