ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன்: 2வது சுற்றில் கிடாம்பி அதிர்ச்சி தோல்வி

முல்ஹெம்:

ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் தொடர் முல்ஹெம் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் உலக நம்பர் 1 வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி, கிரண் ஜார்ஜ், வீராங்கனை தான்வி சர்மா உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், தைவானின் லின் சுன் யீ உடன் மோதினார்.

இதில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 14-21, 9-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.