பெண்களை அடிக்க யாருக்கும் உரிமை கிடையாது- நடிகை லட்சுமி மஞ்சு

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்பாபுவின் மகளும், நடிகையுமான லட்சுமி மஞ்சு தெலுங்கு, இந்தி மொழிகளில் ஏராளமான படங்கள் நடித்துள்ளார். தமிழில் கடல், காற்றின் மொழி, இஞ்சி இடுப்பழகி, பூக்கி படங்களில் நடித்துள்ளார்.

இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற லட்சுமி மஞ்சு பேசியது கவனம் ஈர்த்துள்ளது.

அதில், "நான் ஆணாதிக்கத்தை பொறுத்துக்கொள்ளவே மாட்டேன். திருமணம் என்ற அழகிய பந்தத்தில் ஒருவர் சரியில்லை என்றாலும் அந்த உறவு அர்த்தமற்றதாகி விடும். கணவனின் அடக்குமுறைகளை சகித்து வாழ்வது என்பது அவரவர் விருப்பம். அவர்களிடம் சொல்லிக்கொள்வது ஒன்றுதான். யாரும் நம்மை அடிக்க உரிமை கிடையாது. சுயமரியாதை நமக்கு முக்கியம்.

ஒருகாலத்தில் காதலை பெற்றோரிடம் சொல்லவே பயந்தோம். இன்றைக்கு நான் ஒருவருடன் உறவில் இருக்கிறேன் என்று கூறும் நிலை வந்திருக்கிறது. சமூக வலைதளங்கள் நம் மனதை அசைத்து பார்த்துவிட்டன.

தனக்கு பிடித்த பெண்ணை காதலிக்க ஒரு ஆண் பல்வேறு முயற்சிகளை செய்வார். ஆனால் இன்று ஒரு பெண்ணுக்கு அனுப்ப வேண்டிய எஸ்.எம்.எஸ்-ஐ பலருக்கும் காப்பி செய்து அனுப்புகிறேன். உலகம் நிறைய மாறிவிட்டது. இதுபோன்ற ஆசாமிகளை கண்டறிவது பெண்களின் பொறுப்பு தான் என கூறினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.