VIDEO: பாட்டிலை தூக்கி எறிந்த பாகிஸ்தான் கேப்டன்... பயிற்சியாளருடன் உச்சகட்ட மோதல்

டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டம் ஒன்றில் பாகிஸ்தான்- நமீபியா அணிகள் மோதின. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா மற்றும் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெசன் ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

போட்டியில் அதிரடியாக விளையாட முயன்ற சல்மான் அலி ஆகா, 23 பந்துகளில் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் பெவிலியன் திரும்பியதும், அவரது ஷாட் தேர்வைக் குறித்து பயிற்சியாளர் மைக் ஹெசன் ஏதோ கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த சல்மான் அலி ஆகா, பயிற்சியாளருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கோபத்தின் உச்சத்தில் அவர் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை தரையில் தூக்கி எறிந்தார். இந்த காட்சிகள் நேரலையில் கேமராக்களில் பதிவாகின.

?? Not sending Babar Azam to his number was a bold move by the captain Salman Agha , which made Mike Hassan appear to be getting angry for no reason, pic.twitter.com/WsV2NpkYo2

— SheR•ALI (@Sher__Ali) February 18, 2026

ஏற்கனவே இந்தியாவிடம் 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வியடைந்திருந்த நிலையில், இந்த நமீபியா போட்டி அவர்களுக்கு வாழ்வா-சாவா ஆட்டமாக இருந்தது. இந்த அதீத அழுத்தமே இத்தகைய மோதலுக்குக் காரணம் எனத் தெரிகிறது.

இந்த சம்பவத்தின் போது முன்னாள் கேப்டன் பாபர் அசாம் அருகே அமைதியாக அமர்ந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.