என் அம்மாவுக்கு மறுமணம் செய்துவைக்க விரும்புகிறேன் - நடிகை சுரேகா வாணியின் மகள் சுப்ரிதா பேட்டி
பிரபல குணசித்திர நடிகை சுரேகா வாணி. இவர் தமிழில் உத்தமபுத்திரன், தெய்வத்திருமகள், ஜில்லா, பிரம்மா, எதிர்நீச்சல், மெர்சல், விஸ்வாசம், மாஸ்டர் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.
சுரேகா வாணி கணவர் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டார். இவருக்கு ஒரு மகள் உள்ளார். தற்போது 48 வயதாகும் சுரேகா வாணி இரண்டாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவரது மகள் சுப்ரிதா தெரிவித்துள்ளார்.
தன் அம்மாவுக்கு மறுமணம் செய்துவைக்க விரும்புவது குறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய சுரேகா வாணியின் மகள் சுப்ரிதா, "என்னுடைய திருமணம் நடக்கும் முன்னர், என் அம்மாவுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். என் சொந்தக்காரர்களிடம் கூட இதை பற்றி பேசிவிட்டேன்; அவர்களுக்கும் இதில் சம்மதமே.
அம்மாவை மிக அன்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவரின் விருப்பங்களை மதிக்க வேண்டும். அப்படியான ஒருவர்தான் அம்மாவுக்கு சரியாக இருப்பார். ஆனால், இது என்னுடைய முடிவு மட்டுமில்லையே, அவருடைய விருப்பமும் மகிழ்ச்சியும் தான் பிரதானம். என் அப்பா இடத்தை வேறு யாருக்கும் தரக் கூடாது என அவர் நினைக்கிறார்; அதை நானும் மதிக்கிறேன்" என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


