ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி

ஆம்ஸ்டர்டாம்:

ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், நெதர்லாந்தின் வான் டி ஜன்செல்ப் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஜன்செல்ப் 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் முன்னணி வீரரான சிட்சிபாஸ் 2வது சுற்றுடன் வெளியேறினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.