2026 மாசி மாத ராசிபலன் - சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்
எதிலும் முதன்மையான சிம்ம ராசியினரே!
பிறக்கப் போகும் மாசி மாதத்தில் ராசி அதிபதி சூரியன் சம சப்தமஸ்தானத்தில் உள்ள ராகுவுடன் இணைந்து கிரகண தோஷம் ஏற்பட போகிறது. இது சற்று சுமாரான மாதம் என்பதால் செயல்பாடுகளில் கட்டுப்பாடுகள் தேவை. இந்த காலகட்டத்தில் ஏதேனும் போட்டி பந்தயங்களில் கலந்து கொண்டால் வெற்றி நிச்சயம். ராகு கேது மற்றும் கிரகண தோஷ தாக்கத்தை இறை வழிபாட்டால் குறைக்க முடியும். பணவரவு சந்தோஷத்தை ஏற்படுத்தும். உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உடல் நிலை சீராகும். ஸ்திர சொத்துக்கள் சேரும். சொத்துக்களின் மதிப்பு உயரும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புத்திரர்கள் வழியில் மனமகிழும் சம்பவங்கள் நடைபெறும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வம்பு, வழக்குகள் சாதகமாகும். பெயர், புகழ் அந்தஸ்து உயரும். கவுரவப் பதவிகள், குல தெய்வ அனுகிரகம் கிடைக்கும்.
அவசரத் தேவைக்கு அருகில் உள்ள நகைக் கடையில் அடமானம் வைக்காமல் வங்கியை பயன்படுத்த வேண்டும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பேச்சுகளில் பொறுமை அவசியம். வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகளைத் தவிர்க்கவும். விழிப்புடன் செயல்பட வேண்டும். முன் கோபத்தை குறைத்துக் கொண்டு பொறுமையாக இருக்கவும். முறையான திட்டமிடுதலும், நேர்மையும், இறை நம்பிக்கையும் இருந்தால் எத்தகைய கிரகப் பெயர்ச்சியாலும் உங்களை அசைக்க முடியாது.
எனவே நம்பிக்கை மிக முக்கியம். கோட்ச்சாரம் உங்களுக்கு சாதகமாக இல்லாத காரணத்தால் எந்த விசயத்திற்கும் கோர்ட், கேஸ், போலீஸ் ஸ்டேசன் செல்லாமல் பேசி சமரசமாக பிரச்சனைய முடிப்பது புத்திசாலித்தனம். அரசுக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு அரசுக்கு அபராதம் கட்டும் சூழல் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்ட தடைகள் தாமதங்கள் அகலும். புதிய அரசாங்க ஒப்பந்தங்கள் கிடைக்கும். சகோதர உறவுகளால் மன சஞ்சலங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகமாகும். சுய ஜாதக தசா புக்தி சாதகம் அறிந்து செயல்பட வேண்டும்.
சிலருக்கு காதல் கலப்பு திருமணம் நடக்கலாம். சிற்றின்ப நாட்டம் அதிகரிக்கும். வேற்று மொழி கற்பதில் ஆர்வம் உண்டாகும். ராகு தசா மற்றும் கேது தசா நடப்பவர்கள் கண்டிப்பாக சுய ஜாதகத்தை பரிசீலிக்க வேண்டும். ஒரு சிலருக்கு ஜோதிடம், மாந்தரீகம் கற்க ஆர்வம் மிகும். தியானம் பழகி மனதை கட்டுப்படுத்த முயல்வீர்கள்.
பொருளாதாரம்
தன வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் மறையும். குடும்பத் தேவைகள் நிறைவேறும். விலகிச் சென்ற உறவுகள் விரும்பி வருவார்கள். பொருளாதார சிக்கல்கள் குறையும். நடக்குமா? நடக்காதா என கேள்விக்குறியாக இருந்த அனைத்து நிகழ்வுகளும் மனதிற்கு இனிய முறையில் திருப்பு முனையாக மாறும். எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணம் பல வழிகளில் வந்து பையை நிரப்பும். சேமிப்புகள், முதலீடுகள் அதிகரிக்கும். கையில் பணம் தாராளமாக புழங்கும். வரவுக்கு மீறிய சுப செலவும் இருக்கும். குறுக்கு வழி வருமானத்திற்கு ஆசைப்பட்டு தவறான போன் தகவலை நம்பி அக்கவுண்ட் நம்பரை யாருக்கும் தரக்கூடாது.
உத்தியோகஸ்தர்கள்
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சிறிய பதவி உயர்வுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. கண் துடைப்பிற்கான பதவி உயர்வே தவிர பிரயோஜனம் எதுவும் இருக்காது. வேலைப் பளு அதிகமாக இருக்கும். வேலை பார்த்த இடத்தில் ஏற்பட்ட வீண் பழிகள் அகலும். உங்களை தவறாக வழி நடத்திய கெட்ட நண்பர்கள் விட்டு விலகுவார்கள். ஆரோக்கிய குறைபாடுகள் சீராகும். வேலையின்மையால் பிறரின் வெறுப்பிற்கு ஆளாகியவர்களுக்கு கவுரமான வேலை கிடைக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் இருக்காது. இரண்டு நபர்களுக்கான வேலை செய்து ஒரு நபரின் சம்பளத்தை பெற நேரும். பனிச்சுமை காரணமாக விருப்ப ஓய்வு பெற வாய்ப்பு உள்ளது. சிலர் ஆன்லைனில் வேலை பார்த்துக் கொடுத்த பிறகு உரிய சம்பளம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைவார்கள்.
பெண்கள்
பெண்களுக்கு உடல் உபாதைகள் அகலும். பலருக்கு வாழ்வில் எதிர்பாராத நல்ல சம்பவங்களும் திருப்பு முனையும் உண்டாகும். கணவனின் அன்பு, அனுசரனைக் காக ஏங்கிய சிம்ம ராசிப் பெண்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கு மாமியார், நாத்தனார் டார்ச்சர் குறையும். பண வரவில் இருந்த தடை தாமதம் விலகும். பொருளாதார முன்னேற்றம் மகிழ்ச்சியைத் தரும். ஒரு பெரிய அதிர்ஷ்ட தொகை கிடைக்கும். கஷ்டத்தையும், நஷ்டத்தையும் தந்த உடன் பிறந்த சகோதரரின் நடத்தையில் சிறு மாற்றம் உண்டாகும். விற்க முடியாமல் இழுபறியாக கிடந்த பூர்வீகச் சொத்துக்கள் நல்ல விலைக்கு விற்கும்.
சூரிய கிரகணம்
மாசி 5 (17.2.2026)ல் நடக்கப் போகும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. துக்கங்களும் துயரங்களும் நீங்கும் இதுவரை நிலவிய மன சஞ்சலம், நோய் தாக்கம் குருவின் பார்வையில் கட்டுப்படும். எனக்கு எல்லாம் தெரியும் என்று சிந்திக்காமல் செயல்பட்டவர்கள் சற்று கவனத்துடன் செயல்பட துவங்குவார்கள். வேலைப்பளு குறைந்து வருமானம் அதிகரிக்கும். இளைய மனைவியால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். தவறான போனை நம்பி சேமிப்பில் உள்ள பணத்தை இழக்கும் வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை. சிலர் அதிர்ஷ்டத்தின் மேல் நம்பிக்கை வைத்து எந்திரம், மந்திரம், தந்திரம் என அலைந்து மிகுதியான பொருள் விரயத்தை விலை கொடுத்து வாங்குவார்கள். சிலர் செயற்கை கருத்தரிப்பு மூலம் புத்திர பாக்கியம் அடைவார்கள்.
சந்திர கிரகணம்
மாசி 19ம் தேதி (3.3.2026) அன்று சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. இது பகுதி சந்திர கிரகணமாக இந்தியாவில் சில குறிப்பிட்ட பகுதிகளில் தெரியும். சிம்ம ராசியில் சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. விரயாதிபதி சந்திரன் கேதுவுடன் இணைவதால் கடன் நோய் எதிரி சார்ந்த பாதிப்புகள் வரலாம். தவிர்க்க முடியாத கடுமையான உடல் பாதிப்பு உள்ளவர்கள் அன்று வைத்தியம் செய்யலாம். சுய வைத்தியம். சுயமாக மருந்து எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். கடன் வாங்குவது, கடன் கொடுப்பது, பெரிய பணப் பரிவர்த்தனைகளை தவிர்ப்பது நல்லது. எடுக்கும் காரியங்கள் முயற்சிகளில் தடை தாமதங்கள் இருக்கும். சுயக் கட்டுப்பாடு மிக அவசியம். திட்டமிட்டு செயல்பட வேண்டும். மனதின் எண்ண ஓட்டங்களை கட்டுப்படுத்துவது நல்லது. மன வளர்ச்சியற்றவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுவது நல்லது.
பரிகாரம்
மாசி மாதம் சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வதால் பொருளாதார தேவைகள் நிறைவு பெறும். சிந்தனைகளில் தெளிவுகள் ஏற்படும்.
பொறுப்பான கன்னி ராசியினரே!
அனுபவ அறிவால் வெற்றி பெறும் சாதகமான மாதம். முக்கியமான இடங்களுக்கு குருவின் பார்வை சாதகமாக உள்ளதால் எதைப்பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. பொறுப்புடன் செயல்படுவீர்கள். உங்கள் பேச்சிலும், செயலிலும் அறிவு மேம்படும். உங்கள் சொல்வாக்கும், கவுரவமும் உயரும்.கடந்த கால சங்கடங்கள் விலகி முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். இதுவரை சந்தித்த பிரச்சனைகள் பனி போல் விலகும். முடங்கி கிடந்த தடைபட்ட அனைத்து முயற்சிகளும் வெற்றி வாய்ப்பை தரும் இனிய ஆண்டாக மாறும். இழந்த அனைத்து இன்பங்களும் உங்களைத் தேடி வரப்போகிறது.
தொட்டது துளிர் விடும். பட்டது பூக்கும். திட்டமிட்ட காரியங்களை மெல்ல மெல்ல வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குழந்தைகள் உங்கள் சொற்படி கேட்பார்கள். வீடு கலகலப்பாக இருக்கும். குடும்பத்தில் மனம் மகிழும்படியான நிகழ்ச்சி நடக்கும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வெளிநாட்டு வேலை அல்லது தொழில் மூலம் பணவரத்து கூடும். பிரிந்த உறவுகள் மீண்டும் இணைவார்கள். பூர்வீகச் சொத்து, தாய்வழிச் சொத்து போன்றவற்றில் பாகப் பிரிவினை நடக்கும். பூர்வீகச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். சிற்றின்ப நாட்டம் அதிகரிக்கும். வேற்று மொழி கற்பதில் ஆர்வம் உண்டாகும். தொழில் ஒப்பந்தங்களை நன்றாக படித்த பின்பு கையெழுத்திடவும்.
தாயின் அன்பும் ஆசீர்வாதமும் உங்களை மகிழ்விக்கும். சொந்த வீடு,வாகன கனவு நிறைவேறும். ஜாமீன் கையெழுத்திடுவதை தவிர்க்க வேண்டும். அனைத்து விதமான ஏற்றத் தாழ்வுகளையும் சமாளிக்கும் தைரியம், மனப்பக்குவம் உண்டாகும் பொறுப்புடன் செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினை நீங்கும். மன உளைச்சல் மன அழுத்தங்கள் நீங்கும். உயர்கல்வி படிப்பவர்களுக்கு எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். விருந்து விசேஷங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டு. கண்டக சனி பகவனால் திருமணம் தடைபடாது. பொருத்தமான ஜாதகம் வந்து மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். முதல் திருமணத்தில் தோல்வியை சந்தித்தவர்களுக்கு அடுத்த இல்வாழ்க்கை நல்வாழ்க்கையாக அமையும். சிலருக்கு வெளியூர், வெளி மாநிலப் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உள்ளது.
பொருளாதாரம்
நீண்ட நாட்களாக வராமல் இருந்த வரா கடன்கள் இனி கொஞ்ச கொஞ்சமாக வசூலாகும். பணவரத்து வழக்கத்தை விட அதிகரிக்கும். ஆனால் செலவும் அதற்கு ஏற்றார்போல் இருக்கும். சிலருக்கு பெரிய தொகை கடனாக கிடைக்கும். பழைய கடன்களை அடைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வசிக்கும் வீட்டை விரிவு செய்வீர்கள். ஆனால், அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் ஆவணங்கள் கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும். முன்பு வாங்கிப் போட்ட நிலத்தின் மதிப்பு உயரும்.
உத்தியோகஸ்தர்கள்
தன்னம்பிக்கையால் காரியம் சாதிக்கும் மாதம். உங்களின் புகழ், அந்தஸ்தை உயர்த்த அதிகம் உழைக்க நேரும். விரும்பிய வேலை கிடைக்கும். வெளியூர், வெளி மாநிலம், வெளிநாட்டிற்கு இடம் பெயர நேரும். பேச்சுத் திறமையால் சாதகமான பலனை அடைவார்கள். அரசுப் பணியாளர்களின் முக்கிய தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். சிலர் வேலையில் இருந்து கொண்டு ஓய்வு நேரத்தில் சிறு தொழில் மூலம் வருமானம் ஈட்டலாம். வேலைச் சுமை அதிகரிக்கும். அலுவலகத்தில் பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
பெண்கள்
புதிய பெண் தொழில் அதிபர்கள் அதிகம் உருவாகுவார்கள். ஏற்கனவே சுய தொழிலில் இருக்கும் பெண்கள் தொழிலை பிவிருத்தி செய்வார்கள். புதிய தொழில் நண்பர்கள் கிடைப்பார்கள். தொழில் கடன் வழங்க நிதி நிறுவனங்கள் முன்வரும். பல பெண்கள் உபரி லாபத்தால் நீண்ட கால கடன் பிரச்சனையிலிருந்து விடுபடுவார்கள். கணவர், புகுந்த, பிறந்த வீட்டினரின் ஆதரவு மகிழ்ச்சி தரும். இதுவரை சரியில்லாத வேலை, குறைவான சம்பளத்தில் இருந்தவர்களுக்கு நல்ல கம்பெனியில் அதிக சம்பளத்தில் வேலை கிடைக்கும். தீராத நோயால் அவதிப்பட்டவர்களுக்கு நோய் கட்டுப்படும்.
சூரிய கிரகணம்
மாசி 5 (17.2.2026)ல் நடக்கப் போகும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. கன்னி ராசிக்கு 6ம்மிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் கிரகணம் ஏற்படுவதால் கையில் பணம் புரள்வதால் கவர்ச்சியான விளம்பரத்தை நம்பி புதிய தொழிலில் இறங்க வேண்டாம். சற்று ஏற்ற இறக்கமான பலன்களே உண்டாகும். குடும்பத்தில் குழப்பம் நீங்கி மன நிறைவு, நிம்மதி அதிகரிக்கும். பூர்வீகத்தை விட்டு வெளியூர், வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு வாழ்க்கை வசந்தமாகும். வழக்குகள் சாதகமாகும் அல்லது தள்ளுபடியாகும்.
குரு உபதேசம், ஜோதிடம், மருத்துவம், யோகா, தியானம் போன்ற துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்லவும். அசுப கிரகங்கள் மறைவு ஸ்தானத்திற்கு செல்வது நல்லது. வெளிநாட்டு குடியுரிமை, விசா சார்ந்த பிரச்சனைகள் அகலும். ராகு, கேதுக்களின் நிலைப்பாடு சற்று சுமாராக உள்ளது. தன்னம்பிக்கையுடன் உரிய வழிபாட்டு முறைகளை கடைபிடித்தால் தெய்வத்தின் அருட்கடாட்சம் கிடைக்கும்.
சந்திர கிரகணம்
மாசி 19ம் தேதி (3.3.2026) அன்று சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. இது பகுதி சந்திர கிரகணமாக இந்தியாவில் சில குறிப்பிட்ட பகுதிகளில் தெரியும். ராசிக்கு 12ம் மிடமான அயன சயன விரய ஸ்தானத்தில் லாப ஸ்தான அதிபதி சந்திரனுடன் கேது இணைந்து சந்திர கிரகண தோஷம் ஏற்படுகிறது. தூக்கம் சற்று குறைவுபடும். மனசஞ்சலம் பய உணர்வும் இருக்கும். குடும்ப உறவுகளுக்காக சூழ்நிலை கைதியாக இருப்பீர்கள். அதிர்ஷ்டம் சார்ந்த செயல்களில் ஆதாயம் குறைவுபடும். பங்குச்சந்தை ரேஸ் லாட்டரி சீட்டு போன்றவற்றை தவிர்க்க வேண்டும். கை, கால் மூட்டு வலி, பாதம், இடது கண் போன்றவற்றில் பாதிப்பு இருக்கும். கண், மூட்டு அறுவை சிகிச்சைகளை ஒத்தி வைக்கவும். ஆரோக்கியத்தை அதிகரிக்க கூடிய உணவு சாப்பிடுவது நல்லது. கண் அறுவை சிகிச்சை செய்தவர்களின் மருத்துவ சிகிச்சைக்கு உதவ வேண்டும். உயிர் காக்க தேவையான நிலையில் அறுவை சிகிச்சை செய்யலாம். மற்றவர்கள் ஒரு நாள் கழித்து அறுவை சிகிச்சை செய்யலாம். அறுவை சிகிச்சை அவசியம் செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பவர்கள் குல இஷ்ட தெய்வத்தை வழிபட்டு அற
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


