தொழிலதிபரைக் கரம்பிடிக்கும் சச்சின் டெண்டுல்கர் மகன்! - யார் இந்த சானியா சந்தோக்?

சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கும், இளம் தொழிலதிபர் சானியா சந்தோக்-குக்கும், மும்பையில் அடுத்த (மார்ச்)மாதம் 5 ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது.

இதையொட்டி, அடுத்த மாதம் 3 ஆம் தேதி முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற உள்ளன.

பிரதமருக்கு திருமண அழைப்பு

தனது மகன் திருமண விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்ட தலைவர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் நேரில் சென்று அழைப்பு விடுத்திருக்கிறார்.

கடந்த வருடம் அர்ஜுன் டெண்டுல்கருக்கும், சானியா சந்தோக்-குக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இதில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இந்நிலையில் தற்போது இந்தத் திருமணத்தை பிரமாண்டமாக நடத்த இருக்கின்றனர்.

யார் இந்த சானியா சந்தோக்?

சானியா சந்தோக் பிரபல தொழிலதிபர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

பிரபல தொழிலதிபர் ரவி காய்-ன் பேத்தி.

London School of Economics and Political Science கல்லூரியில் படித்த சானியா, பாவ்ஸ் பெட் ஸ்பா & ஸ்டோர் எல்எல்பி நிறுவனத்தின் பங்குதாரராகவும், இயக்குநராகவும் இருக்கிறார்.

அர்ஜுன் டெண்டுல்கர் - சானியா சந்தோக்
அர்ஜுன் டெண்டுல்கர் - சானியா சந்தோக்

இவர்களது குடும்பத்திற்கு இண்டர்கான்டினன்டல் என்ற ஹோட்டல் இருக்கிறது.

இது தவிர புரூக்ளின் க்ரீமெரி என்ற ஐஸ் கிரீம் பிராண்ட் கடைகளும் இருக்கிறது.

விலங்கு நலன் மற்றும் செல்லப்பிராணி பராமரிப்பு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் கொண்ட சானியா, இன்ஸ்டாகிராமில் 820 பாலோவர்ஸ்களைக் கொண்டிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.