டி20 உலகக்கோப்பை: 2வது சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா திரில் வெற்றி

10-வது டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக டிகாக் 59 ரன்களும் ரிங்கல்டன் 61 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் ஓமர்சாய் 3 விக்கெட்டும் ரஷித்கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி ஒருபுறம் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தாலும் மறுபுறம்அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து. அதிரடியாக விளையாடிய ரஹ்மானுல்லா குர்பாஸ் 42 பந்துகளில் 84 ரன்கள் அடித்து அவுட்டனார்.

ஆப்கானிஸ்தான் அணி 19.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் அடித்தது. இதனால் போட்டி சமனில் முடிந்தது.

இதையடுத்து சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. அதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 17 ரன்களை குவித்தது.

இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 1 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் அடித்தது. இதனால் சூப்பர் ஓவரும் டை ஆனது.

இதையடுத்து 2 ஆவது சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. 2 ஆவது சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் அடித்தது.

இதையடுத்து 24 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 18 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வி அடைந்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.