கத்தார் ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக், ரிபாகினா அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்

தோஹா:

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், பெண்கள் பிரிவு 2வது சுற்றுக்கு இகா ஸ்வியாடெக், ரிபாகினா ஆகியோர் தேர்வாகினார்.

இதில் போலந்தின் இகா ஸ்வியாடெக் இந்தோனேசியாவின் ஜேனிஸ் டென்னை 6-0, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தினார்.

மற்றொரு போட்டியில் அதிரடியாக ஆடிய கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, சீனாவின் வாங் ஜின் யுவை 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.