ரஞ்சி டிராபி: கேஎல் ராகுல் சதம்- மும்பையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது கர்நாடகா
ரஞ்சி டிராபியின் காலிறுதி ஆட்டங்களின் 4-வது காலிறுதியில் மும்பை- கர்நாடகா அணிகள் விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால் கர்நாடகாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 120 ரன்னில் சுருண்டது.
இதனையடுத்து களமிறங்கிய கர்நாடகா அணி முதல் இன்னிங்சில் 173 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் 53 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சில் விளையாடிய மும்பை அணி 377 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் பேட்டர் ஆகாஷ் ஆனந்த் 70 ரன்கள் குவித்தார். இதனால் கர்நாடகா வெற்றி பெற 325 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
KL Rahuls century will be remembered for a long time. It was his innings that propelled Karnataka into the semi-finals! ?? pic.twitter.com/DTVWldVbiA
— Pawan kumar (@Pawanar02106943) February 9, 2026
கடினமான இலக்குடன் களமிறங்கிய கர்நாடக அணியில் கேஎல் ராகுல் சதம் அடித்து அசத்தினார். அவர் 130 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி வரை போராடிய ரவிச்சந்திரன் 83 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் கர்நாடக அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


