ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: காலிறுதியில் இந்தியா தோல்வி
கிங்டாவோ:
6-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் கிங்டாவோ நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 ஆண்கள் அணிகளும், 11 பெண்கள் அணிகளும் தலா 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில், பெண்கள் பிரிவு காலிறுதியில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் சீனாவிடம் தோல்வி அடைந்தது.
இதேபோல், ஆண்கள் பிரிவு காலிறுதி போட்டியில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தென் கொரியாவிடம் தோல்வி அடைந்தது.
இதன்மூலம்இந்திய அணி காலிறுதி சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறியது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


