ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சபலென்கா, ரூப்லெவ் 3-வது சுற்றுக்கு தகுதி

மெல்போர்ன்:

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

உலகின் முதல் நிலை வீராங்கனையான சபலென்கா (பெலாரஸ்) இன்று காலை நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் தகுதி நிலை வீராங்கனையான ஹோசியானை (சீனா) எதிர் கொண்டார்.

இதில் சபலென்கா 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்ற ஆட்டங்களில் சுவிட்டோலினா (உக்ரைன்) ஸ்னைடெர் (ரஷியா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 13-வது வரிசையில் உள்ள ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா) 6-4, 6-3, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் போர்ச்சுகல்லை சேர்ந்த ஜேமிபெரியாவை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.