நயன்-விக்கி துபாய்க்கு போனதுக்கு அஜித் மட்டும் காரணமில்ல!.. இப்படி ஒரு விஷயம் இருக்கா?!…

ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடக்க தொடங்கியவர் நயன்தாரா. அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்து ஒரு கட்டத்தில் நம்பர் ஒன் நடிகையாக மாறினார். லேடி சூப்பர்ஸ்டார் என்கிற பட்டமும் இவருக்கு கிடைத்தது. ஒருகட்டத்தில் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா மாறினார்.

விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்தார். நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் திருமணத்திற்கு பின் இரண்டு ஆண் குழந்தைகளை வாடகை தாய் மூலம் பெற்றெடுத்து இருவரும் வளர்த்து வருகிறார்கள்.

சமீப காலமாகவே நயன்தாரா நடிப்பில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில்தான் சமீபத்தில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் துபாய் சென்று அஜித் பங்கேற்கும் கார் ரேஸ் நடக்கும் இடத்திற்கு சென்று அவருடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

இந்நிலையில்தான் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் துபாய் சென்றதற்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. சமீபத்தில் துபாய் புர்ஜ் கலிபாவில் ஒரு பிரம்மாண்டமான விட்டை அவர்கள் வாங்கியிருக்கிறார்கள். அந்த வீட்டில்தான் பொங்கலையும் கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோவை ஏற்கனவே சமூகவலைத்தளங்களில் இருவரும் பதிவிட்டார்கள்.

அந்த வீடியோவில் கூட வீட்டுக்கு பின்னால் பல உயரமான கட்டிடங்கள் தெரியும். அப்படி துபாய் வீட்டுக்கு சென்றிருந்தபோதுதான் அஜித்தின் அழைப்பை ஏற்று அவர்கள் இருவரும் கார் ரேஸ் நடக்கும் இடத்திற்கு சென்றதாக சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.