அட்லீ - ப்ரியா தம்பதிக்கு இரண்டாவது குழந்தை!

ராஜா ராணி, தெறி படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் அட்லீ. அதனைத்தொடர்ந்து மெர்சல், பிகில் என விஜய்யை வைத்து அடுத்தடுத்து படங்கள் எடுத்து பட்டித் தொட்டி எங்கும் புகழ்பெற்றார். தொடர்ந்து பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜாவான் படம் எடுத்தார். பான் இந்தியா படமான இப்படம் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அதனைத்தொடர்ந்து தற்போது அல்லு அர்ஜுனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக இயக்குநர் அட்லீ அறிவித்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு ப்ரியாவை திருமணம் செய்துகொண்டார் அட்லீ. இந்த தம்பதிக்கு முன்னரே வீர் என்ற ஆண்குழந்தை உள்ளது. இந்நிலையில் தங்களது இரண்டாவது கர்ப்பம் குறித்து அறிவித்துள்ளனர். இவர்களுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  

View this post on Instagram

A post shared by Priya Mohan (@priyaatlee)


மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.