இந்திய ஓபன் பேட்மிண்டன்: தென்கொரிய வீராங்கனை அன் சே-யங் சாம்பியன்

இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் டெல்லி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சீனாவின் வாங் ஜியி- தென்கொரியாவின் அன் சே-யங் உடன் பலப்பரீட்சை நடத்தினர்.

இதில் தென்கொரிய வீராங்கனையின் ஆட்டத்திற்கு வாங் ஜியி-யால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் அன் சே-யங் 21-13, 21-11 என எளிதாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

இவர் ஏற்கனவே 2023-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். கடந்த ஆண்டும் சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், தற்போது தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மொத்தம் 3 முறை டெல்லி ஓபனை வென்றுள்ளார்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் தைவானைச் சேர்ந்த லின் சுன்-யி இந்தோனேசியாவைச் சேர்ந்த ஜோனாடன் கிறிஸ்டியை எதிர்கொண்டார். இதில் லின் 21-10, 21-18 என வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.