தெறி ரீ-ரிலீஸ்: தயாரிப்பாளர் தாணு வெளியிட்ட இரண்டு மாஸ் அப்டேட்கள்!

விஜய் நடிப்பில் வெளியான படம் தெறி. அட்லி இயக்கத்தில் உருவான இப்படத்தில் எமி ஜாக்சன், சமந்தா என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். இதில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது. இப்படம் இந்தியிலும் வருண் தவான் நடிப்பில் பேபி ஜான் என்ற பெயரில் கடந்த வருடம் ரிலீஸ் ஆனது.

இந்த நிலையில், தமிழில் தெறி படம் பொங்கலை ஒட்டி ஜனவரி 15 அன்று ரீ ரிலீஸ் ஆக உள்ளதாக தயாரிப்பாளர் தாணு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தார்.

ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படதிற்கு சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்டதால் அப்படம் குறித்தபடி ஜனவரி 9 வெளியாகாதது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது.

எனவே தெறி படம் பொங்கலை ஒட்டி ரீரிலீஸ் ஆவது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்த சூழலில் தயாரிப்பாளர் தாணு வெளியிட்ட எக்ஸ் பதிவில், "வரவிருக்கும் படங்களின் தயாரிப்பாளர்களின் கோரிக்கைக்கு இணங்க , தெறி படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்." என்று அறிவித்தார்.

இந்நிலையில், தெறி படம் ரீ ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் தாணு இரண்டு அப்டேட்களை கொடுத்துள்ளார். ஆமாம்.. தெறி ரீ ரிலீஸ் ஆகும் புதிய தேதியை தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். அதன்படி, தெறி படம் வரும் 23ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தெறி ரீ-ரிலீஸின் டிரெய்லர் நாளை வெளியாகும் எனவும் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

ஜனவரி 15 முதல் அகிலமெங்கும்Thalapathy @actorvijay @Atlee_dir @gvprakash @Samanthaprabhu2 @iamAmyJackson #ThalapathyVijay #Theri #10YearsOfTheri pic.twitter.com/on3Pr30enp

— Kalaippuli S Thanu (@theVcreations) January 10, 2026

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.