உஜ்ஜைன் மகாகாலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த விராட் கோலி
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி விளையாடி வருகிறார்.
கடந்த 14-ம் தேதி ராஜ்கோட்டில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இதனையடுத்து மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் நடைபெற இருக்கிறது.
இதற்காக இந்தூர் சென்ற இந்திய வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலை இந்திய அணி வீரரான விராட் கோலி உஜ்ஜைனில் உள்ள பிரசித்தி பெற்ற மகாகாலேஸ்வரர் திருக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
முதல் ஒருநாள் போட்டியில் 93 ரன்கள் அடித்த விராட் கோலி, இரண்டாவது போட்டியில் 23 ரன்னில் ஆட்டம் இழந்தார். நாளை வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


