லீசெல் லீ அதிரடி: உ.பி.யை வீழ்த்தி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது டெல்லி

நவி மும்பை:

மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 7-வது லீக் ஆட்டத்தில் டெல்லி-உ.பி. அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த உ.பி.வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது.

கேப்டன் மெக் லானிக் அரை சதம் கடந்து 54 ரன்னில் அவுட்டானார். ஹர்தின் தியோ 47 ரன்னில் ரிடயர்டு அவுட்டில் வெளியேறினார்.

டெல்லி அணி சார்பில் ஷபாலி வர்மா, மரிஜான்னே காப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகளான ஷபாலி வர்மா- லீசெல் லீ ஜோடி அதிரடியாக ஆடியது.

முதல் விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்த நிலையில் ஷபாலி வர்மா 36 ரன்னில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய லீசெல் லீ அரை சதம் கடந்து 67 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், டெல்லி அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.