WPL வரலாற்றில் மற்றொரு சாதனை படைத்த ஹர்மன்பிரீத் கவுர்
மும்பை:
டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் 1,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் தான்.
நான்காவது பெண்கள் பிரிமீயர் லீக் டி20 தொடர் மும்பை புறநகரான நவி மும்பையில் நடந்து வருகிறது.
இதில் நேற்றிரவு நடந்த 6-வது லீக்கில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் ஜெயன்ட்சை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த குஜராத் அணி 192 ரன்களைக் குவித்தது.
193 ரன் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 37 ரன்னுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தாலும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நிலைத்து நின்று கைகொடுத்தார். தனது 10-வது அரைசதத்தைப் பூர்த்தி செய்த அவர் அதன் பிறகு இரண்டு முறை கண்டம் தப்பி அணியை வெற்றிகரமாக கரைசேர்த்தார்.
இந்நிலையில், பெண்கள் பிரிமீயர் லீக் தொடரில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்தியர் என்ற பெருமையை ஹர்மன்பிரீத் கவுர் பெற்றார்.
இந்தப் பட்டியலில் மும்பை அணி வீராங்கனையும், இங்கிலாந்து ஆல் ரவுண்டருமான நாட் ஸ்கீவர்-பிரண்ட் முதலிடத்தில் உள்ளார். அவர் 1,101 ரன்களுடன் உள்ளார். ஹர்மன்ப்ரீத் 1,016 ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


