பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் மெத்வதேவ்

சிட்னி:

பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் அலெக்ஸ் மிச்செல்சன் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் பிரண்டன் நகஷிமா 7-6 (7-4), 6-4 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீரரான அலெக்சாண்டர் கோவாசெவிக்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் மெத்வதேவ், பிரண்டன் நகஷிமாவை சந்திக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.