ரஞ்சி கோப்பையில் தமிழகம் 182 ரன்களுக்கு சுருண்டது

விசாகப்பட்டினம்: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள தமிழக அணி தனது 4-வது ஆட்​டத்​தில் நேற்று ஆந்​தி​ரா​வுடன் மோதி​யது. விசாகப்​பட்​டினத்​தில் நடை​பெற்ற இந்த போட்​டி​யில் முதலில் பேட் செய்த தமிழக அணி 74.3 ஓவர்​களில் 182 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது.

அதி​கபட்​ச​மாக வித்​யூத் 40, சந்​தீப் வாரியர் 29, சோனு யாதவ் 26, பாபா இந்​திரஜித் 19, நாராயண் ஜெகதீசன் 19 ரன்​கள் சேர்த்​தனர். விமல்​கு​மார் 10, பாலசுப்​ரமணி​யம் சச்​சின் 4, பிரதோஷ் ரஞ்​ஜன் பால் 8, ஆந்த்ரே சித்​தார்த் 0, கேப்​டன் சாய் கிஷோர் 8, திரிலோக் நாக் 4 ரன்​களில் நடையை கட்​டினர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.