தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி தேடி வரும்: இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஷபாலி வர்மா நம்பிக்கை

சண்​டிகர்: தன்​னம்​பிகை வைத்து செயல்​படும்​போது அதற்​கான வெற்​றிகள் தேடி வரும் என்று இந்​திய மகளிர் அணி கிரிக்​கெட் வீராங்​கனை ஷபாலி வர்மா தெரி​வித்​தார்.

கடந்த வாரம் நடை​பெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​திய அணி 52 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தென் ஆப்​பிரிக்க அணியை வீழ்த்தி முதல் முறை​யாக சாம்​பியன் பட்​டம் வென்​றது. இறு​திச் சுற்​றில் ஷபாலி வர்மா சிறப்​பாக விளை​யாடி 87 ரன்​கள் குவித்து ஆட்​ட​நாயகி விருதை கைப்​பற்​றி​னார். மேலும், பந்​து​வீச்​சின்​போது 2 விக்​கெட்​களைச் சாய்த்து அணியை வெற்​றிக்கு அழைத்​துச் சென்​றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.