டி20 தொடரை 3-1 என வென்றது நியூஸிலாந்து
டூனிடின்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி தொடரை 3-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது.
டூனிடின் நகரில் நேற்று நடைபெற்ற 5-வது டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 18.4 ஓவர்களில் 140 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ராஸ்டன் சேஸ் 38, ரோமாரியோ ஷெப்பர்டு 36 ரன்கள் சேர்த்தனர். நியூஸிலாந்து அணி சார்பில் ஜேக்கப் ஃடபி 4, ஜேம்ஸ் நீஷம் 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


