ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் குமார் சங்ககாரா நியமனம்

ஜெய்ப்பூர்: ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியில் தலைமை பயிற்சியாளராக மீண்டும் குமார் சங்ககாரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான குமார் சங்ககாரா, கடந்த 2023 முதல் 2024 வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார். பின்னர் கடந்த சீசனில் அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். கடந்த சீசனில் ராகுல் திராவிட் அந்த அணியின் பயிற்சியாளராக செயல்பட்டிருந்தார். தற்போது அந்த பொறுப்பில் இருந்து அவர் விலகி உள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.