4 வேதங்களையும் பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும்: ஜோதிட முனைவர் கே.பி.வித்யாதரன் வலியுறுத்தல்
திருவண்ணாமலை: நான்கு வேதங்களையும் பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று ஜோதிட முனைவர் கே.பி.வித்யாதரன் கூறினார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் வேதாகம தேவார ஆன்மிக கலாச்சார மாநாடு நேற்று நிறைவடைந்தது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டின் 2-வது நாளான நேற்று காலை 1,008 மகளிர் பங்கேற்ற திருவிளக்கு பூஜை, சுமங்கலிப் பிரார்த்தனை நடைபெற்றது.
அண்ணாமலையார் கோயில் இளவரசு பட்டம் பி.டி.ரமேஷ் குருக்கள் தலைமை வகித்தார். சென்னை வேதாகம தேவார ஆன்மிக கலாச்சார அறக்கட்டளை நிர்வாகி ஸ்ரீஜெகதீஷ் கடவுள் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற காஞ்சி பீடாதிபதி ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியா சுவாமிகள் திருவிளக்கு பூஜையைத் தொடங்கி வைத்து அருளாசி வழங்கினார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

